twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வனிதாவிடமே மகன் இருக்கலாம்-நடிகர் ஆகாஷின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

    By Sudha
    |

    Vanitha
    நடிகை வனிதாவுக்கும், முதல் கணவர் ஆகாஷுக்கும் பிறந்த விஜய் ஸ்ரீஹரி, தனது தாயிடமே இருக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதுதொடர்பாக ஆகாஷ் தாக்கல் செய்திருந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

    முதலில் வனிதாவுக்கும், அவரது தந்தை விஜயக்குமாருக்கும் இடையே மோதல் மூண்டது. பின்னர் இது வனிதா, ஆகாஷ் இடையிலான பூசலாக மாறியது. இருவருக்கும் பிறந்த மகன் விஜய் யாருக்குச் சொந்தம் என்பதில் பெரும் மோதல் ஏற்பட்டது.

    விஜய்ஸ்ரீஹரி வனிதாவுடன் இருப்பதா, முதல் கணவர் ஆகாஷிடம் இருப்பதா என்பது தொடர்பாக வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

    ஜனவரி 18-ந் தேதிக்கு பின்னர் விஜய்ஸ்ரீஹரியை, ஆகாஷ் வனிதாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இதில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து ஆகாஷ் உச்சநீதிமன்றத்தை அணுகினார்.

    அதில் வனிதாவிடம் விஜய் ஸ்ரீஹரியை ஒப்படைக்க கூடாது. அவனை தன்னுடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தற்போது வனிதாவுக்கு சாதகமாக தீர்ப்பளித்துள்ளது. விஜய் ஸ்ரீஹரி, வனிதாவிடம் இருப்பதற்குத் தடை இல்லை என்று நீதிமன்றம் கூறி விட்டது. மேலும் ஆகாஷின் மனுவையும் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.

    English summary
    SC has quashed the petition of Actor Akash. He had prayed for the custody of his son Vijay Srihari with former wife Vanitha. Recenty Madras HC had permitted Akash to keep his son with him till Jan 18. So Akash moved to SC. SC has now dismissed Akash's plea and ruled that Vanitha can keep the child.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X