Don't Miss!
- News போலி பத்திரம்.. ஆன்லைனிலேயே பத்திர மோசடியை கண்டுபிடிக்கலாமா? இதை கவனியுங்க.. தமிழக அரசு சபாஷ்
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காஷ்மீர் கலவரத்தில் சிக்கிய மீரா-கார் மீது கல்வீச்சு
பங்காரு பாபு என்ற தெலுங்கு படத்தில் ஜெகபதிபாபு ஜோடியாக நடித்து வருகிறார் மீரா ஜாஸ்மின்.
படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியை, காஷ்மீரில் படமாக்கத் திட்டமிட்டனர்.
அதன்படி ஜெகபதிபாபுவும், மீரா ஜாஸ்மினும் ஞாயிற்றுக்கிழமை காஷ்மீர் சென்றனர். ஸ்ரீநகரில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கினர்.
நேற்று இருவரும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக, தனித்தனி கார்களில் புறப்பட்டுச் சென்றுள்ளனர். ஜெகபதி பாபுவின் கார் முன்னால் போய்க் கொண்டிருந்தது. மீரா ஜாஸ்மின் கார் பின்னால் சென்றது.
அப்போது, கோணாமார்க் பகுதிகளில் ஒரு அமைப்பினர் திடீர் கலவரத்தில் ஈடுபட்டு அந்த வழியே சென்ற வாகனங்களை தாக்க ஆரம்பித்தனர்.
மீரா ஜாஸ்மின் மற்றும் ஜெகபதி பாபு சென்ற கார்கள் மீதும் திடீரென்று கல்வீச்சு நடந்தது. இதையடுத்து அந்தப் பகுதிக்கு விரைந்த ராணுவம் கலவரக்காரர்களை விரட்டியடித்து மீரா உள்ளிட்ட அப் பகுதியில் சென்ற அனைவரையும் கலவரத்திலிருந்து மீட்டனர்.
தொடர்ந்து அங்கு படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலை உள்ளதால் படக் குழு உடனே டெல்லி வழியாக விமானத்தில் ஹைதராபாத் திரும்பிவிட்டது.