Don't Miss!
- News கர்நாடகா: குமாரசாமி, பிரஜ்வல், டிகே சுரேஷ்.. அதிகாரத்தை கைப்பற்ற முட்டி மோதும் 'கவுடா குடும்பங்கள்'!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
முதல் முறையாக 'கேக்' வெட்டிய கேபி!
கே.பாலச்சந்தரும், இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் இணைந்து முதல் முறையாக ஒரு படத்தில் நடிகர்களாக கலக்கிக் கொண்டிருக்கின்றனர். அது ரெட்டைச்சுழி.
மிகப் பெரிய நடிகர்களை ஆட்டிப்படைத்த அசாத்திய இயக்குநர்களான இவர்களே வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு நடிகர்களாக களம் இறங்கியிருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் ரெட்டைச்சுழி படப்பிடிப்புத் தளத்தில் கே.பாலச்சந்தர் தனது பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடினார்.
கேக் வெட்டித்தான் பிறந்த நாள் கொண்டாடுவார்கள். அதில் அதிசயம் இல்லை. ஆனால் பாலச்சந்தர் அப்படிக் கொண்டாடியதுதான் அதிசயம். காரணம், இதுவரை அவர் தனது வாழ்நாளில் ஒருமுறை கூட கேக் வெட்டிக் கொண்டாடியதில்லையாம்.
9ம் தேதிதான் பாலச்சந்தர் பிறந்த நாள். படப்பிடிப்புக்காக நெல்லையில் முகாமிட்டிருந்த பாலச்சந்தர், பிறந்த நாளுக்காக சென்னைக்குப் போய் விட்டு நேற்று நெல்லை திரும்பினார்.
வந்தவரை கேக் சகிதமாக வரவேற்றனர் ரெட்டைச்சுழி படக்குழுவினர். பாரதிராஜா மற்றும் படக்குழுவினரின் அன்புக் கட்டளையைத் தட்ட முடியாமல் கேக் வெட்டினார். அவருக்கு பாரதிராஜா கேக் துண்டை எடுத்து வாயில் ஊட்டி விட்டார்.
பாரதிராஜா இதுகுறித்துக் கூறுகையில், நான் சினிமாவுக்கு வந்ததற்கு இருவர்தான் காரணம். ஒருவர் ஸ்ரீதர், இன்னொருவர் பாலச்சந்தர். அவர்களுடைய சாதனை அளவிட முடியாதது. அதைக் கொண்டாடும் வகையிலும்தான் கேக் வைத்துக் கொண்டாட வேண்டும என நான் கேட்டுக் கொண்டேன் என்றார்.
பாலச்சந்தர் கூறுகையில், பாரதியின் அன்பு எனக்குப் புதுத் தெம்பைக் கொடுததுள்ளது. இயக்குநர்களாக இருவரும் சிகரம் தொட்டிருக்கிறோம். நடிகர்களாகவும் நாங்கள் பதிவு செய்வோம் என்றார் போட்டிருந்த மீசை துடிதுடிக்க.
சரி, இந்த 'இளைஞருக்கு' எத்தனை வயது என்று சொல்லவில்லையே... 80 ஆகி விட்டதாம்!