நான்கு நாட்கள் நடக்கும் ஜெனிலியா - ரிதேஷ் திருமணம்!
நடிகை ஜெனிலியாவுக்கும் அவரது காதலர் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கிற்கும் வரும் பிப்ரவரி 5-ம் தேதி திருமணம் நடக்கிறது.
நான்கு நாட்கள் இந்த திருமணம விழா நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றனர். ரிதேஷின் தந்தை விலாஸ்ராவ் தேஷ்முக், இப்போதைய மத்திய அமைச்சர். மராட்டிய மாநிலத்தின் முன்னாள் முதல்வர் என்பதால் வெகு ஆடம்பரமாக திருமணத்தை நடத்த உள்ளனர்.
பிப்ரவரி 3-ந்தேதி மெகந்தியும், 4-ந்தேதி சங்கீத் நிகழ்ச்சியும் நடக்கின்றன. 5-ந்தேதி முகூர்த்தம் நடக்கிறது. 6-ந்தேதி திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
அரசியல் தலைவர்கள், தமிழ், இந்தி, தெலுங்கு நடிகர், நடிகைகள் திருமணத்துக்கு அழைக்கப்பட உள்ளனர்.
இதனால் திருமணத்துக்கு முன்னால் கைவசம் உள்ள படங்களை முடித்து விட ஜெனிலியாவும் ரிதேஷ்தேஷ்முக்கும் தீவிரமாக உள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications
