Don't Miss!
- News இறங்கிய வேகத்திலேயே ஏறிய சின்ன வெங்காயம்.. கோயம்பேட்டில் இஞ்சி பாருங்க.. சென்னையில் காய்கறிகள் விலை
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
'இனி சினிமாவை ரோட்டில் போட்டுதான் விற்கணும்!' - சேகரன்
புதுமுகங்கள் அஜாஸ், அனாகா மற்றும் ஷில்பா நடிக்கும் ஜி ஆண்ட்ஸ் சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் முதல் படமான விழியில் விழுந்தவள் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சத்யம் திரையரங்கில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் கே பாக்யராஜ் கலந்து கொண்டு ஆடியோவை வெளியிட்டார்.
முதல் சிடியை சிவசக்தி பாண்டியன் பெற்றுக் கொண்டார்.
விழாவில் பங்கேற்ற கலைப்புலி சேகரன் பேச்சு விழாவின் ஹாலைட்டாக அமைந்தது.
அவர் பேசுகையில், "சினிமாவில், டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்தபின், படங்கள் அதிகமாக தயாராகி வருகின்றன. அவைகளை திரையிடுவதற்கு தியேட்டர்கள் கிடைக்காத நிலை உள்ளது.
ஒரு உதாரணத்துக்கு சொல்கிறேன். தக்காளி போன்ற காய்கறிகள் விளைச்சல் அதிகமானால், ரோட்டில் போட்டு விற்பார்கள். அதேபோல் திரைப்பட துறையிலும் விளைச்சல் அதிகமாக இருக்கிறது.
இதே நிலை தொடர்ந்தால், படங்களை ரோட்டில் போட்டு விற்கும் நிலை வரும். அந்த நிலை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். திட்டமிட்டு படமெடுத்து, திட்டமிட்டு ரிலீஸ் செய்யணும்" என்றார்.
படத்தின் கதாநாயகன், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான அஜாஸ் நன்றி கூறினார்.
இந்தப் படத்துக்கு புது இசையமைப்பாளர் பொல்லாக் இசையமைத்துள்ளார்.