அரைகுறை... அதிரவைத்த மந்திரா!

கொல்கத்தாவில் பிரபல டிசைனர் சத்யா பால் நடத்திய கொல்கத்தா பேஷன் வீக்-2 ஷோவில் பங்கேற்றார் மந்திரா பேடி. கைத்தறி, பட்டு நெசவு மற்றும் கைவினைத் தொழிலாளர்களை கெளரவிக்கும் (?!) பொருட்டு இந்த ஷோ நடத்தப்பட்டது. எல்லோருமே பட்டு மற்றும் கைத்தறியாலான உடைகளை மட்டுமே அணிந்து பூனை நடைபோட்டனர்.
இந்த ஷோவில் நடிகைகள் சமீரா ரெட்டி, ரியா சென் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். ஆனால் அவர்களையெல்லாம் ஒரே 'வாக்'கில் ஓரம் கட்டிவிட்டார் மந்திரா.
உடலைச் சுற்றி பட்டுப் புடவையும், முன்பக்கம் மட்டும் 'மறைத்தும் மறைக்காததுமான' ஜாக்கெட்டையும் அணிந்து அவர் நடந்து வந்தபோது அரங்கம் அதிர்ந்தது.
"கொல்கத்தா நான் பிறந்த ஊர். இங்குள்ள மக்களை மகிழ்விக்கவும், கைத்தறியின் பெருமையை உலகுக்கு எடுத்துச் சொல்லவும் நானும் ஒரு காரணமாக இருந்ததை எண்ணி பெருமைப்படுகிறேன்...," என்றார் மந்திரா.
More from Filmibeat
அரைகுறை உடை கொல்கத்தா பேஷன் வீக் பட்டு மற்றும் கைத்தறி மந்திரா பேடி kolkata fashion week mandira bedi satya paul topless


Click it and Unblock the Notifications











