மீடியாக்களின் அனத்தல்-அரை நிர்வாண தரிசனம் தந்தார் பூனம் பாண்டே

பூனம் பாண்டே என்றால் யார் என்றே இந்தியாவில் யாருக்கும் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் உலகக்கோப்பையை இந்தியா வென்றால் நான் நி்ர்வாண தரிசனம் தருவேன் என்று அறிவித்து ஓவர்நைட்டில் உலகப் புகழ் பெற்றார் பூனம்.
ஆனால் இந்தியா உலகக் கோப்பையை வென்ற பின்னர் அவரை ஆளைக் காணவில்லை. இதுகுறித்து பிளாக்குகளில் மக்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு அனத்த ஆரம்பித்து விட்டனர்.
இதுகுறித்து தனது பிளாக்கில் கருத்து தெரிவித்த பூனம், பொது இடத்தில் நிர்வாணமாக காட்சி தர முடியாது. அது சட்டப்படி குற்றமாகும். கிரிக்கெட் வீரர்களுக்காக காட்சி தர நான் தயார். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டேன். ஆனால் அவர்கள் அனுமதி தர மறுத்து விட்டனர் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் நடிகர் அக்ஷய் குமார் நடத்தும் காத்ரோன் கி கிலாடி என்ற ஸ்ண்ட் காட்சிகளை அடிப்படையாகக் கொண்ட ரியாலிட்டி ஷோவில் பூனம் பங்கேற்கவுள்ளார். இதுதொடர்பான பத்திரிக்கையாளர் நிகழ்ச்சிக்கு அவர் வந்திருந்தார்.
பூனத்தைப் பார்த்ததும் மீடியாக்காரர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். என்னாச்சு என்னாச்சு என்று அவர்கள் அனத்தி எடுத்தனர். இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்திய பூனம், டக்கென தனது மேலாடையை விலக்கி விட்டார். உள்ளே நீச்சலுடையை அவர் அணிந்திருந்தார்.
இப்போது என்னை புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சிரித்தபடி கூறவே போட்டி போட்டுக் கொண்டு கேமராக்காரர்கள் போட்டோக்களை எடுத்துக் குவித்து விட்டனர்.
கேமராக்கள் தன்னைப் பார்த்து படபடவென்று கண் சிமிட்டியதை ரசித்துப் பார்த்தபடி சில விநாடிகள் இப்படியும் அப்படியுமாக திரும்பி போஸ் கொடுத்தார் பூனம்.
முழு நிர்வாண தரிசனம் கொடுப்பதாக கூறிய பூனம் இப்போது அரை நிர்வாண தரிசனம் கொடுத்து இந்தப் பிரச்சினையை இத்துடன் முடித்திருப்பதாக கருதப்படுகிறது.
இதற்கிடையே, இந்த ஸ்டண்ட் ஷோவில் பங்கேற்க பூனத்திற்கு ரூ. 50 லட்சம் சம்பளமாக தரப் போவதாக பேச்சு அடிபடுகிறது. அதேசமயம், பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவிலும் கூட பூனம் சேர்க்கப்படக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











