Don't Miss!
- News மேடையிலேயே நிலைக்குலைந்த நிதின் கட்கரி.. மயங்கி விழுந்ததால் பரபரப்பு.. ஷாக் வீடியோ
- Education 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரம்.. மே 10-ம் தேதி ரிசல்டுக்கு மாணவர்கள்
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
சம்மனுடன் பிரபுதேவா-நயனைத் தேடியலையும் கோர்ட் அமீனா!!
பிரபுதேவா- நயன்தாரா திருமணத்தை எதிர்த்து அவரது மனைவி ரம்லத் குடும்ப நல நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அனுப்பப்பட்ட சம்மன்களை வேண்டுமென்றே பிரபுதேவாவும் நயன்தாராவும் வாங்காமல் தவிர்த்துவிட்டது தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கில் முதல் சம்மன் அனுப்பப்பட்ட போது இருவரும் ஆஜராகவில்லை. எனவே இரண்டாவது சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அதையும் இருவரும் வாங்கிக் கொள்ளவில்லையாம்.
பிரபுதேவா வீட்டில் ஆள் இல்லை என்று திரும்பியது. நயன்தாரா சம்மன் நடிகர் சங்கத்துக்கு அனுப்பப்பட்டு மானேஜர் வாங்க மறுத்ததால் திரும்பியது.
இதையடுத்து 2-வது சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. அதையும் இருவரும் வாங்கவில்லை. திட்டமிட்டு இருவரும் வாங்க மறுப்பதாக ரம்லத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து கடந்த மாதம் 23-ந்தேதி குடும்ப நல நீதிமன்றம் 3-வது சம்மனை அனுப்பி வைக்க உத்தரவிட்டது. இந்த சம்மனையும் இதுவரை இருவரும் வாங்கவில்லை. கோர்ட்டு மூலமும், கொரியரிலும் பதிவு தபாலிலும் இவைகள் அனுப்பப்பட்டன. கோர்ட்டு சம்மனை அமீனா கையில் வைத்துக் கொண்டு தேடி அலைகிறார்.
நயன்தாராவின் கேரள முகவரிக்கு அனுப்பப்பட்ட சம்மன்கள் ஆள் இல்லை என திரும்பியுள்ளன. எனவே இந்த சம்மன்களும் வாங்கப்படாமல் திரும்பும் சூழ்நிலைகள் உருவாகியுள்ளன. சம்மனை வாங்காவிட்டால் அடுத்து என்ன செய்யலாம் என்று வக்கீல்களுடன் ரம்லத் ஆலோசனை நடத்துகிறார். காவல் நிலையத்தில் புகார் தரலாமா என்றும் யோசித்து வருகிறாராம் ரம்லத்.
ஒரு சாமானியன் ஏதாவது தவறு செய்து விட்டால் அல்லது புகாருக்கு உள்ளாகி விட்டால் உடனே பிடித்து உள்ளே போட்டு விடுகிறார்கள். ஆனால் பிரபலங்கள் இப்படி ஏதாவது சிக்கினால் ரொம்பத்தான் அலைய விடுகிறார்கள்.
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
மார்வெல் ஸ்டூடியோஸின் அடுத்த படம்.. அதிரடியாக வெளியான Deadpool & Wolverine ட்ரெய்லர்