Don't Miss!
- News சமாளிக்கவே முடியல.. மிகப் பெரிய பிரச்சினை! முதல்வருக்கு பறந்த கடிதம்.. அன்புமணி கொடுக்கும் ஐடியா!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ராதிகாவின் '38 ஸ்டெப்ஸ்'!
'மன்னா... என்னா...' அல்லது 'வாயில நுழையற மாதிரி பேரு, வாழைப் பழம்' போன்ற அரதப் பழசான அல்லது கடி ஜோக் நாடகங்களிலிருந்து மக்க்களைக் காப்பாற்றும் புதிய பொறுப்பை ஏற்றிருக்கிறார் ராதிகா சரத்குமார்.
சித்தி மூலம் மெகா சீரியல் இலக்கணத்தையே மாற்றி எழுதியவரல்லவா...!
100 பேர் நடிக்க வேண்டிய ஒரு முழு நீள நாடகத்தை வெறும் 4 பாத்திரங்களை மட்டும் வைத்துக் கொண்டு சொல்லும் ஒரு அபார, அதே நேரம் நவீன நாடக முறையை அவர் அறிமுகப்படுத்தவிருக்கிறார், ஏவாம் குழுவினருடன் இணைந்து.
கிட்டத்தட்ட மேடையிலேயே முழு சினிமாவை அதன் த்ரில்களோடு பார்க்கும் அனுபவத்தை இந்த நாடகங்கள் தரும். சினிமாவில் வருவது போன்ற கார், பைக் சேஸிங் மட்டுமல்ல, பெரிய ரயில் சேசிங் கூட நடத்துவார்களாம் மேடையில். ரயில்வே ஸ்டேஷன், பேப்பர் மற்றும் பாப்கார்ன் விற்கிற ஆட்கள், பயணிகள், ரயில் கொள்ளை, துப்பாக்கி சேஸிங் என்று இந்த நால்வர் மட்டுமே நடத்தும் இந்த டைப் காட்சிகள் மேல்நாடுகளில் படு பிரபலம்.
இந்த மாதிரி நாடகங்களுக்கு 39 ஸ்டெப்ஸ் என்று பெயர்.
இந்த புதிய அனுபவத்தை தென்னிந்தியா முழுவவதிலும் உள்ள ரசிகர்களுக்கு தரப்போகிறார்களாம்.
முதல் கட்டமாக வரும் அக்டோபர் 29, 30 மற்றும் 31 தேதிகளில் சென்னை வேங்கட சுப்பாராவ் கலையரங்கில் நடத்தப் போகிறார்களாம். டிக்கெட்டுகளுக்கு லேண்ட்மார்க் அல்லது 98404 44916, 98406 13333 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்கிறார் ராதிகா.