Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
பிள்ளைகளுக்கு சிவக்குமாரின் கோரிக்கை!
ஆண்டுதோறும் ப்ளஸ்டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ மாணவிகளுக்கு தனது சிவகுமார் அறக்கட்டளை மூலம் கடந்த 28 ஆண்டுகளாக உதவித் தொகைகளை வழங்கி வருகிறார் நடிகர் சிவக்குமார்.
தற்போது சிவக்குமார் அறக்கட்டளை தனது 29-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த ஆண்டு 3 லட்சம் ரூபாய் ஊக்கப் பரிசுகளை வழங்கினார் சிவக்குமார்.
பரிசுத் தொகையை வழங்கிய பின்னர் சிவக்குமார் பேசியதாவது;
நான் சின்ன வயதில் தந்தையை இழந்து படிக்கவே வழியின்றி பட்ட கஷ்டங்களின் விளைவுதான் இப்போது வழங்கப்படும் ஊக்கப் பரிசுகள்.
நான் படிக்க வேண்டும் என்பதற்காகவே தன் படிப்பை 3-ம் வகுப்போடு நிறுத்திக் கொண்டார்கள் என் அக்கா. என் படிப்புச் செலவுக்காக என் அம்மா 7 வருடங்கள் வெறும் கேழ்வரகு கூழ் சாப்பிட்டு கடனை அடைத்தார்கள்.
சென்னையில் தங்கிப் படித்த காலத்தில் குளிக்க சோப் வாங்கக் கூட வழியில்லாமல் தவித்த நாட்கள் எத்தனையோ...
என்னைப் போன்ற ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்களை தமிழகம் முழுக்க தேடிப் பிடித்து உதவி செய்து வருகிறேன். இதில் ஒரு தனி மன நிறைவு.
இந்நேரத்தில் மாணவ, மாணவியருக்கு ஒரே ஒரு அறிவுரை சொல்ல விரும்புகிறேன்.
எக்காரணத்தைக் கொண்டும் உங்கள் தாய் தந்தையரை முதியோர் இல்லங்களில் சேர்த்து, அவர்களின் பாசத்தைக் கேவலப்படுத்தி விடாதீர்கள். பின்னர் இந்த நிலைதான் வழிவழியாக உங்களுக்கும் தொடரும் என்றார்.
சூர்யா
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகுமாரின் மகன் நடிகர் சூர்யா மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். அவர் பேசுகையில், 29 வருடங்களாக அப்பா செய்துவரும் சேவையைப் பார்த்துதான் அகரம் பவுண்டேஷனைத் தொடங்கினேன். இந்த அறக்கட்டளை மூலம் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறேன்.
அன்பு குமார் என்ற மாணவர் தமிழக அரசின் ஆதிதிராவிட நலப் பள்ளியில் படித்து தமிழக அளவில் முதலிடம் பெற்று இப்போது மருத்துவக் கல்லூரியிலும் இடம் பெற்றுள்ளார். அவருக்கான மொத்த படிப்புச் செலவையும் அகரம் அறக்கட்டளை ஏற்கிறது என்றார்.
நிகழ்ச்சிக்கு வந்தவர்களை கே.ஈ.ஞானவேல்ராஜா வரவேற்றார். த.செ.ஞானவேல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?