Don't Miss!
- News நிர்மலா சீதாராமன் ஒரே போடு.. "மீண்டும் தேர்தல் பத்திர திட்டம் கொண்டு வருவோம்".. ஓடோடி வந்த காங்கிரஸ்
- Lifestyle குழந்தையின்மைக்கு இந்த பிரச்சனைகள் எல்லாம் காரணமாக இருக்கலாம்.. கவனியுங்கள்..!
- Sports தோனி பேட்டிங் ஆட வருவதை தாமதப்படுத்திய வீரருக்கு விருது கொடுத்த ஜான்டி ரோட்ஸ்.. என்ன நடந்தது?
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Automobiles ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை..! - மு க அழகிரி
கே கிரியேஷன்ஸ் சார்பில் கே.ஆர்.கண்ணன், காதலாகி என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தை கே.ஆர்.விஷ்வா இயக்குகிறார்.
படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை 'பிலிம்சேம்பர்' திரையரங்கில் நேற்று நடந்தது.
விழாவில், மத்திய உரம் மற்றும் ரசாயன மந்திரி மு.க.அழகிரி கலந்துகொண்டு படத்தின் பாடல்களை வெளியிட்டுப் பேசினார்.
அவர் கூறுகையில், "எனக்கு திரைப் பாடல்கள் ரொம்பப் பிடிக்கும். இங்கே கவிஞர் வைரமுத்து பேசும்போது, நான் பழைய சினிமா பாடல்களை அதிகமாக விரும்பி கேட்பதாக கூறினார். அது உண்மைதான். பழைய பாடல்கள் போல புதிய பாடல்கள் இல்லை.
நான் வீட்டில் இருக்கும்போதும், வெளியில் இருக்கும்போதும் பழைய பாடல்களைத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
இன்று இங்கு மூன்று பாடல்களை கேட்டவுடன், குறிப்பாக ரைஹானா இசையில் அந்த பாடல்களை கேட்டபோது, புதிய பாடல்களையும் இனிமேல் கேட்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.
அதற்காக புதிய பாடல்களை நான் ஒரேயடியாக கேட்பதில்லை என்று சொல்லிவிட முடியாது. புதிய பாடல்களை அதிகமாகக் கேட்பதில்லை. அவ்வளவுதான்..." என்றார்.
விழாவில் கலைஞர் டி.வி. நிர்வாகி அமிர்தம், கவிஞர் வைரமுத்து, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து ஆகியோரும் பேசினார்கள்.
-
ஊட்டி மலை ப்யூட்டி.. உதகைக்கு டூர் போறீங்களா?.. அப்போ உங்க பிளே லிஸ்ட்ல இதெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க!
-
Baakiyalakshmi: ஐயய்யோ.. கர்ப்பமா.. ஏன் இப்படி பண்ணினே.. ராதிகாவிடம் கோபி கேட்ட கேள்வி!
-
Sivakarthikeyan: புல்லட்டை விட வலிமையானது வாக்கு.. ஆப்ரஹாம் லிங்கன் வாசகத்தை கூறிய சிவகார்த்திகேயன்!