Don't Miss!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தரமான தியேட்டர்கள்-சேரன் வலியுறுத்தல்
திருவனந்தபுரத்தில் கேரள அரசு சார்பில் 14வது சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. வருகிற 18ம் தேதி வரை நடக்கும் விழாவில் பல்வேறு மொழிகளை சேர்ந்த 164 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
இதில் சேரனின் பொக்கிஷம், மம்முட்டி, சரத்குமார் நடித்த பழசிராஜா ஆகிய படங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. விழாவின் ஒருபகுதியாக, 'டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் சினிமா வளர்ச்சி' பற்றிய கருத்தரங்கு நடந்தது.
திரைப்பட அகடமி தலைவர் மோகனன், துணைத்தலைவர் ஜோசப், நடிகை பத்மப்பிரியா மற்றும் சினிமா துறையை சேர்ந்த பல்வேறு பிரமுகர்கள், பிரபலங்கள் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கை இயக்குனர் சேரன் தொடங்கி வைத்து பேசுகையில், 'டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து கொண்டு இருக்கிறது. இந்த டிஜிட்டல் தொழில்நுட்பம் நம் வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் செல்வாக்கு செலுத்துகிறது.
சிறந்த தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகும் சினிமாக்களை திரையிடும் வகையில் தியேட்டர்களின் தரம் உயர வேண்டும். தரம் உயர்ந்தால் மட்டுமே உண்மையான ரசனை சாத்தியப்படும். இதற்காக சினிமா துறையை சேர்ந்தவர்கள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்' என்றார்.