Don't Miss!
- News அள்ள அள்ள தங்கம்.. பளபளன்னு ஜொலித்த நகைகள்.. திருவண்ணாமலை பேங்க்கில் நுழைந்த ஆபீசர்ஸ்.. அடக்கடவுளே
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸைமிஸ் பண்ணிடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தரமான தியேட்டர்கள்-சேரன் வலியுறுத்தல்
திருவனந்தபுரத்தில் கேரள அரசு சார்பில் 14வது சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. வருகிற 18ம் தேதி வரை நடக்கும் விழாவில் பல்வேறு மொழிகளை சேர்ந்த 164 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
இதில் சேரனின் பொக்கிஷம், மம்முட்டி, சரத்குமார் நடித்த பழசிராஜா ஆகிய படங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. விழாவின் ஒருபகுதியாக, 'டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் சினிமா வளர்ச்சி' பற்றிய கருத்தரங்கு நடந்தது.
திரைப்பட அகடமி தலைவர் மோகனன், துணைத்தலைவர் ஜோசப், நடிகை பத்மப்பிரியா மற்றும் சினிமா துறையை சேர்ந்த பல்வேறு பிரமுகர்கள், பிரபலங்கள் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கை இயக்குனர் சேரன் தொடங்கி வைத்து பேசுகையில், 'டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து கொண்டு இருக்கிறது. இந்த டிஜிட்டல் தொழில்நுட்பம் நம் வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் செல்வாக்கு செலுத்துகிறது.
சிறந்த தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகும் சினிமாக்களை திரையிடும் வகையில் தியேட்டர்களின் தரம் உயர வேண்டும். தரம் உயர்ந்தால் மட்டுமே உண்மையான ரசனை சாத்தியப்படும். இதற்காக சினிமா துறையை சேர்ந்தவர்கள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்' என்றார்.