Don't Miss!
- News பயங்கரமாக சரிந்த வாக்குப்பதிவு.. 15 ஆண்டுகளில் இதுதான் மோசம்.. அந்தமானில் ஆர்வம் காட்டாத மக்கள்! ஏன்
- Finance அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த சீனா.. வாஸ்ட்அப்-க்கு தடை.. என்ன நடக்குது..?!
- Automobiles அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
கெளதம் மேனனின் 'ஓமணப் பெண்ணே...'
கெளதம் மேனனின் இயக்கத்தில் சிம்பு, திரிஷா இணை சேர்ந்துள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது. இப்படத்தின் மூலம் ரஹ்மானுடன் முதல் முறையாக கெளதம் மேனன் இணைந்துள்ளார்.
சென்னையில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் முதல் கேசட்டை வெளியிட, கலைஞானி கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார்.
நீண்ட பேச்சுக்கள் இல்லாமல், சுருக்கமாக இருந்தது இந்த விழா. படத்தின் பாடல்களைப் பாடியுள்ள சின்மயி, கார்த்திக், தேவன், விஜயப்பிரகாஷ், பிளேஸ், அல்போன்ஸ், நரேஷ் ஐயர், பென்னி தயாள் ஆகியோர் தங்களது பாடல்களை மேடையில் பாடினர்.
பின்னர் பாடல் காட்சிகள் திரையிடப்பட்டன. இதுவரை பார்த்திராத அழகுடன் சிம்பு படு ஹேன்ட்சம் ஆக காட்சியளித்துள்ளார் அத்தனை பாடல்களிலும். திரிஷாவின் அழகும் மயக்க வைக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் கதை கெளதம் மேனனின் சொந்தக் காதல் கதை என்று ஒரு பேச்சு உள்ளது.
படத்தின் பாடல்களில் ஓமணப் பெண்ணே பாடல் அனைவரையும் வசீகரித்தது. ரசிகர்களிடமும் இந்தப் பாடல் ஹிட் ஆகி வருகிறதாம்.
இந்தப் பாடல் கடைசியாகத்தான் சேர்க்கப்பட்டதாம். ரஹ்மான்தான் ஒரு மலையாளப் பாட்டை படத்தில் சேர்க்க முடியுமா என்று கேட்டாராம் கெளதமிடம். மேனனும் உடனே சரியென்றாராம். இதையடுத்து மலையாளத்தில் வெளியான ஹிட் பாடல் ஒன்றை கவிஞர் தாமரையிடம் ரஹ்மான் போட்டுக் காட்டியுள்ளார். பின்னர் அதன் சாயலில் ஓமணப் பெண்ணே பாட்டை எழுதிக் கொடுத்துள்ளார் தாமரை.
இதையடுத்து அந்தப் பாட்டையும், மலையாள ஒரிஜினல் பாட்டையும் கலந்து இந்த ஹிட் பாட்டை உருவாக்கினாராம் ரஹ்மான்.