Don't Miss!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
வெளிநாட்டில் குடியேற விருப்பம் இல்லை-ரஹ்மான்
இந்தியாவின் முன்னணி இசை அமைப்பாளரும், ஆஸ்கர் விருது வென்றவருமான ரஹ்மான் அமெரிக்காவில் இருந்து தொடர்ந்து இசையமைக்க வாய்ப்பு வருவதால் அங்கு சென்று குடியேறப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் ஈசா திரைப்படத்தின் பாடல் கேசட் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட ஏஆர் ரஹ்மான் கூறுகையில்,
நான் இந்த விழாவுக்கு வந்திருப்பதும் பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கலாம். நான் இங்கு வந்ததற்கு விசேஷமான காரணம் ஒன்று இருக்கிறது. ஈசா படத்தின் இசை அமைப்பாளரின் தந்தை ஒரு இசை குழுவை வைத்திருந்தார். நான் என்னுடைய இளம் வயதில் ஒரு இசை குழுவை வைத்திருந்தேன்.
அப்போது அவருடன் ஏற்பட்ட பழக்கம் தான் என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்துள்ளது.
நான் அமெரிக்காவில் சென்று குடியேற போவதாக கூறுவது எல்லாம் வதந்தி. எனது குடும்பத்தினர் மற்றும் சொந்தக்காரர்கள் அனைவரும் சென்னையில் தான் இருக்கிறார்கள்.
வெளிநாட்டு வாய்ப்புகளுக்காக நான் சென்னையை விட்டு போகமாட்டேன். நான் இங்கு தான் இருப்பேன்.
தற்போது நான் எந்திரன், சுல்தான் தி வாரியர், விண்னை தாண்டி வருவாயா, ராவணா என நான்கு படங்களுக்கு இசையமைத்து வருகிறேன் என்றார் ரஹ்மான்.