Don't Miss!
- News அரசியல் வாழ்க்கையே ஓவர்? தாமரையை நம்பி போய் சேற்றில் சிக்கிட்டாரே.. இளம் தலைக்கு பாஜக வைத்த ஆப்பு
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வெளிநாட்டில் குடியேற விருப்பம் இல்லை-ரஹ்மான்
இந்தியாவின் முன்னணி இசை அமைப்பாளரும், ஆஸ்கர் விருது வென்றவருமான ரஹ்மான் அமெரிக்காவில் இருந்து தொடர்ந்து இசையமைக்க வாய்ப்பு வருவதால் அங்கு சென்று குடியேறப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் ஈசா திரைப்படத்தின் பாடல் கேசட் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட ஏஆர் ரஹ்மான் கூறுகையில்,
நான் இந்த விழாவுக்கு வந்திருப்பதும் பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கலாம். நான் இங்கு வந்ததற்கு விசேஷமான காரணம் ஒன்று இருக்கிறது. ஈசா படத்தின் இசை அமைப்பாளரின் தந்தை ஒரு இசை குழுவை வைத்திருந்தார். நான் என்னுடைய இளம் வயதில் ஒரு இசை குழுவை வைத்திருந்தேன்.
அப்போது அவருடன் ஏற்பட்ட பழக்கம் தான் என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்துள்ளது.
நான் அமெரிக்காவில் சென்று குடியேற போவதாக கூறுவது எல்லாம் வதந்தி. எனது குடும்பத்தினர் மற்றும் சொந்தக்காரர்கள் அனைவரும் சென்னையில் தான் இருக்கிறார்கள்.
வெளிநாட்டு வாய்ப்புகளுக்காக நான் சென்னையை விட்டு போகமாட்டேன். நான் இங்கு தான் இருப்பேன்.
தற்போது நான் எந்திரன், சுல்தான் தி வாரியர், விண்னை தாண்டி வருவாயா, ராவணா என நான்கு படங்களுக்கு இசையமைத்து வருகிறேன் என்றார் ரஹ்மான்.