Don't Miss!
- News வெறும் 6 நிமிஷம்.. பொசுக்குனு சர்ப்ரைஸ்.. அடுத்தடுத்த மகிழ்ச்சி.. 100% வாக்குப்பதிவை நோக்கி தமிழகம்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தெலுங்கில் கலக்கும் அக்பர்காரு!
அசுதோஷ் கோவரிகர் இயக்கத்தில், ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியாகியுள்ள இந்திப் படம் ஜோதா அக்பர். இப்படம் இந்தியில் பெரும் வெற்றி பெற்றது.
சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கிலும் இதன் டப்பிங் வெளியானது. இதில் தமிழை விட தெலுங்குப் பதிப்புக்கு நல்ல வரவேற்பும், வசூலும் கிடைத்துள்ளதாம்.
இதுகுறித்து அசுதோஷ் கோவரிகர் கூறுகையில், தமிழை ஒப்பிடும்போது தெலுங்கில் சிறப்பாக படம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆந்திராவிலும், தமிழ்நாட்டிலும் இந்தி பதிப்பும் வெளியிடப்பட்டது. இருப்பினும் ஆந்திராவில் இரு மொழிகளிலும் ஜோதா அக்பர் சிறப்பாக ஓடுகிறது.
தமிழில் ஜோதா அக்பர் சரியாக போகாதற்கு காரணம் கிமு.1000 என்ற ஹாலிவுட் படத்தின் தமிழ் டப்பிங் வெளியானதே முக்கிய காரணம் என்று விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள். இருப்பினும் தமிழ் ஜோதா அக்பரும் விரைவில் பிக்கப் ஆகும் என நம்புகிறேன்.
இப்படம் வெற்றி பெற்றிருப்பது எனக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. ஆனால் பல பிரச்சினைகளுக்குப் பிறகுதான் இந்த வெற்றி கிடைத்துள்ளது. ராஜஸ்தானில் ஏற்பட்ட அனுபவம் இன்னும் கசப்பானதாகவே இருக்கிறது. இந்தப் படம் உண்மையில் ராஜஸ்தானுக்கான படம். ஆனால் அங்கு படத்தை திரையிட முடியவில்லை என்றார் கோவரிகர்.