Don't Miss!
- News கேம் சேஞ்சர் ஆக போகும் நாம் தமிழர்.. இந்த தொகுதிகளில் மொத்தமாக முடிவே மாற போகுது.. அப்போ அதிமுக?
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
3வது முறையாக மாரடைப்பு - மருத்துவமனையில் மணிரத்தினம் அனுமதி
3வது முறையாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால் ஆபத்தான கட்டத்தில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மணிரத்தினம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவை மேம்பட்ட நிலைக்கு உயர்த்தியவர்களில் ஒருவராகக் கருதப்படும் இயக்குநர் மணிரத்னம், இப்போது ராவண் எனும் புதிய படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் - அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடித்து வரும் இந்தப் படம் கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு மணிரத்னத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை உடனடியாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அவரது மீடியா மேனேஜர் நிகில் முருகனிடம் தொடர்பு கொண்டோம்.
மணிரத்னம் இப்போது தீவிர சிகிச்சையில் உள்ளார் என்றும், தற்போது நிலைமை சீராக உள்ளதாக மருத்துவர்கள் கூறுவதாகவும் நிகில் தெரிவித்தார்.
3வது முறை..
மணிரத்னத்துக்கு இதற்கு முன்பு 2 முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. முதலில் ஆய்த எழுத்து படப்பிடிப்பின்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதன் பிறகு ஓய்வு எடுத்து வந்த மணிரத்னம், சற்று இடைவெளி கொடுத்து குரு படத்தைத் தொடங்கினார்.
குரு படத்தின் ஷூட்டிங்குக்காக கொல்கத்தா சென்றிருந்தபோது அவருக்கு மீண்டும் மாரடைப்பு வந்தது.
இந்த நிலையில் இப்போது ராவண் படத்தை இயக்கும் போது மீண்டும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இச்செய்தி மணிரத்னம் மற்றும் சினிமா ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
மணிரத்னம் நலம்பெற்று வந்து நல்ல சினிமாக்கள் தர பிரார்த்திப்போம்!