Don't Miss!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Lifestyle எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- Finance அமெரிக்காவுக்கு பிறக்கும் இந்திய நகை கடைகள்.. சின்ன கல்லு பெத்த லாபம்..!!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
ரிலீஸாகுது 'மயிலு'!
ரிலீசுக்கு முன்பே இளையராஜாவின் பாடல்கள் பெரிதும் பேசப்பட்ட படம் இது. ஒரு பொங்கல் தினத்தில், இந்தப் பாடல்கள் உருவான விதத்தை இசைஞானி லைவ்வாகவே காட்ட, மெய் மறந்துபோனார்கள் ரசிகர்கள்.
ஆனால் தயாரிப்பாளர்களுக்கிடையில் எழுந்த மோதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அப்படியே நின்றுவிட்டது மயிலு.
அந்தப் படத்தில் அறிமுகமாகவிருந்த இயக்குநர் ஜீவன், அதற்குப் பிறகு பா விஜய்யை வைத்து ஞாபகங்கள் எடுத்துவெளியிட்டது நினைவிருக்கலாம்.
இப்போது மீண்டும் மயிலை வெளியிடும் முயற்சியில் தீவிரமாக உள்ளார் தயாரிப்பாளரும் நடிகருமான பிரகாஷ் ராஜ். கிறிஸ்துமஸுக்கு இந்தப் படம் வெளியாகிறது.
மதுரையை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கதையில் ஷம்முவும் புதுமுகம் ஸ்ரீயும் நடித்துள்ளனர்.
படம் குறித்து பிரகாஷ் ராஜ் கூறுகையில், "இந்தப் வெளியாவது நல்ல சினிமாவுக்கு, நல்ல இசைக்குக் கிடைத்த வெற்றி என்பேன். இந்தப் படத்தின் நாயகன் இளையராஜாதான். தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத படமாக, இசையாக மயிலு அமையும்," என்றார்.