Don't Miss!
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண கோரிய வழக்கு.. நாளை வரும் இடைக்கால உத்தரவு! இது ஏன் முக்கியம்?
- Automobiles உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மிஸ் வேர்ல்ட் தேர்வில் நடுவர்கள் பாரபட்சம்: பார்வதி புகார்
மிஸ் வேர்ல்ட் பட்டப் போட்டியில் மயிரிழையில் இந்தியாவின் பார்வதி ஓமனக்குட்டன் வெற்றியை நழுவ விட்டார். அவருக்கு முதல் ரன்னர் அப் இடமே கிடைத்தது. ரஷ்யாவைச் சேர்ந்த சுகினோவா மிஸ் வேர்ல்ட் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் நடுவர்கள் பாரபட்சமாக நடந்து கொண்டதால்தான் தனக்கு வெற்றி கிடைக்காமல் போய் விட்டதாக பார்வதி புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கேரளாவைச் சேர்ந்த இந்தியா விஷன் சானலுக்கு அளித்துள்ள பேட்டியில், நான் மற்றவர்களை விட சிறப்பாகவே பங்களித்தேன். கேள்வி, பதில் பகுதியிலும் நான் சிறப்பாகவே பதிலளித்தேன். ஆனால் என்னை 2வது இடத்திற்கு தள்ளி விட்டனர். இது நியாயமற்றது.
நடுவர்கள் பாரபட்சமாக நடந்து கொண்டனர். அவர்களின் முடிவு எனக்கு அதிருப்தியைத் தந்துள்ளது. நான் மட்டுமல்ல எல்லோருடைய எண்ணமும் இதுதான். நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தேன் என்றார் பார்வதி.
பார்வதியின் சொந்த ஊரான கேரள மாநிலம் செங்கனச்சேரியிலும் பார்வதிக்குப் பட்டம் கிடைக்காதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய அழகியை விட பார்வதியே அனைத்து வகையிலும் சிறந்தவர் என்று பார்வதியின் உறவினர்கள், அவரது வீட்டுக்கு அருகாமையில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், 2வது இடம் கிடைத்ததன் மூலம் இந்தியாவுக்கு பார்வதி பெருமைதான் தேடித் தந்துள்ளார் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.