Don't Miss!
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஆபாசமாக நடித்தால் ஆஸிட் அடிப்போம்! - ரகசியாவுக்கு மிரட்டல்
தமிழின் முன்னணி கவர்ச்சி நடிகை ரகஸியா. ரகசியம் ஏதும் வைக்காத அளவுக்கு வெளிப்படையாக கவர்ச்சி காட்டி படங்களில் இவர் போடும் நடனம் 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்'ஸில் படுபிரபலமானது.
இவர் தற்போது பிகினி இந்தியா நிறுவனத்தின் விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனையடுத்து விளம்பரத்தில் ரகஸியா தோன்றும் ஒரு காட்சி புனேயில் படமானது.
அதில் நீச்சல் உடையில் வரும் ரகஸியா, அந்த பிகினி உடையை விளம்பரம் செய்வது போல எடுத்தார்கள்.
அப்போது மராட்டிய நவ நிர்மாண் சேனா கட்சியை சேர்ந்த தொண்டர்கள் சிலர் படப்பிடிப்பு தளத்திற்குள் அத்துமீறி நுழைந்து, படக்குழுவினரை முற்றுகையிட்டு, 'ஆபாச காட்சிகளை படமாக்கக்கூடாது' என்று எதிர்த்தனர்.
பின்னர் போலீசார் வந்து அவர்களைச் சமாதானப்படுத்தி கலைத்தனர். இனி இதுபோன்ற காட்சிகள் படமாக்கப்படக் கூடாது என்று எச்சரித்துவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். ஆனாலும் அன்ற படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுவிட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ரகஸியாவின் செல்போனில் தொடர்பு கொண்ட ஒரு நபர், தன்னை மகாராஷ்ட்ர நவ நிர்மாண் சேனா கட்சியை சேர்ந்தவர் எனவும், பிகினி இந்தியா நிறுவன மாடல் ஒப்பந்தத்திலிருந்து ரகஸியா விலகிவிட வேண்டும் என்றும், கவர்ச்சியாக தொடர்ந்து நடித்தால் முகத்தில் ஆசிட் வீசி கொன்று விடுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஓஷிவாரா போலீசில் நடிகை ரகஸியா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.