Don't Miss!
- News கோவை, தஞ்சாவூர், திருவாரூர்.. தாகம் தீர்க்கும் மின்வாரிய அணைகள்.. குடிநீர் வடிகால் வாரியம் அதிரடி
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'அச்சமுண்டு அச்சமுண்டு'..வெளியி்ட்ட பூக்குட்டி
அருண் வைத்யநாதன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் அச்சமுண்டு அச்சமுண்டு. இப்படத்தின் ஆடியோ கேசட் வெளியிட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடந்தது.
விழாவில் தனது பிசியான வேலைகளுக்கு நடுவில் ஆஸ்கர் விருது வென்ற ரெசூல் பூக்குட்டி கலந்து கொண்டு பாடல் கேசட்டை வெளியிட்டார். அந்த பாடல் கேசட்டை படத்தின் இசை அமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் சகோதரர் யுவன் சங்கர் ராஜா மற்றும் சகோதரி பவாதாரிணி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நாசர் ஆகியோர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பாலு மகேந்திரா கூறுகையில், அருண் வைத்தியநாதன் தனது முதல் முயற்சியையே சிவப்பு சிந்தனையுடன் ஆரம்பித்துள்ளார் என்றார்.
உலக நாயகன் கமலஹாசன் உடனான தனது முதல் சந்திப்பின் அனுபவத்தையும் அதன் மூலம் நான் கற்று கொண்ட விஷயங்களையும் விழாவுக்கு வந்திருந்தவர்களுடன் ரெசூல் பூக்குட்டி பகிர்ந்து கொண்டார்.
பாடல் கேசட் வெளியிட்டு முன்னதாக படத்தின் டிரைலரும், மூன்று பாடல்களும் திரையிடப்பட்டது. விழாவுக்கு திரையுலக நட்சத்திரங்கள் பலர் திரண்டு வந்திருந்த போதிலும் படத்தின் நாயகன் பிரசன்னா, நாயகி சினேகா ஆகியோர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. விசாரித்ததில் அவர்கள் விழாவுக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.