Don't Miss!
- News இருக்கு ஆனா இல்ல? சூரி முதல் ஜெயக்குமார் வரை.. ஓட்டு உரிமையை இழந்த பிரபலங்கள்!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- Lifestyle உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
பாடகரானார் முதல்வர் பேரன்!
சுந்தர்.சி, மீனாட்சி, நமீதா இணைந்து நடிக்கும் படம் பெருமாள் படத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் ஒரு பாடல் பாடுகிறார். 1980ல் பாக்யராஜ் இயக்கி நடித்து சக்கை போடு போட்ட படம் சுவர் இல்லாத சித்திரங்கள். இதில் வரும் காதல் வைபோகமே என்ற பாடல் கங்கை அமரனின் இசையில் படுபிரபலம் அன்றைக்கு.
அந்தப் பாடலைத்தான் பெருமாளுக்காக ரீமிக்ஸ் செய்கிறார் ஸ்ரீகாந்த் தேவா, அறிவுநிதியின் குரலில். இந்த பாடலை பாடி முடிக்க அவர் எடுத்துக் கொண்ட நேரம் ஜஸ்ட் 30 நிமிடங்கள்தான். சில வாரங்களுக்கு முன்புதான் மு.க.முத்து மீண்டும் சினிமாவில் பாடத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
'மற்ற ரீமிக்ஸ் பாடல்களைப் போல அல்லாமல் இந்த பாடலில் வரிகள், இசை எதையும் மாற்றாமல் ரீமிக்ஸ் செய்கிறோம். அறிவுநிதிக்கு நல்ல இசைஞானம் உள்ளது. சீக்கிரம் கிரகித்துக் கொண்டு நன்றாகப் பாடுகிறார். 2005ல் அவர் பாடி வெளியான பக்தி ஆல்பம் கேட்டேன். அப்போதிலிருந்தே அவரைப் பாட வைக்க வேண்டும் என்று நினைத்து இந்த பாடலை பாட வைத்துள்ளேன்' என்றார் ஸ்ரீகாந்த் தேவா.
அறிவுநிதிக்கு நடிப்பதிலும் ஆர்வம் அதிகமாக இருக்கிறதாம். விரைவில் படம் தயாரிப்பிலும் ஈடுபட உள்ளாராரம்.
கலை(ஞர்) குடும்பத்தின் அடுத்த தலைமுறையும் சினிமாவில் முத்திரை பதிக்கத் தொடங்கியுள்ளது. தொடரட்டும்...