Don't Miss!
- News ம்ம்.. என்னோட 90 நிமிஷ பேச்சை கேட்டு காங்கிரஸ் கூட்டணியே பீதியாகிபோய் கிடக்கு.. பெருமிதப்படும் மோடி
- Lifestyle இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
காங்கிரசில் நடிகை ஜெயசுதா
சிரஞ்சீவி தனிக் கட்சி தொடங்கியதில் இருந்து ஆந்திராவில் காங்கிரசும், தெலுங்கு தேசமும் கலகலத்துப் போயுள்ளன. என்.டி.ராமா ராவின் மகன் கிருஷ்ணாவை தெலுங்கு தேசத்துக்காக தீவிரமாக பிரச்சாரத்தில் இறக்கிவிட்டுள்ளார் சந்திரபாபு நாயுடு. அதே போல ராமா ராவ் குடும்பத்தைச் சேர்ந்த அரை டஜன் திரைப்பட நட்சத்திரங்களும் தெலுங்கு தேசத்துக்காக கொடி பிடிக்க ஆரம்பித்துள்ளனர்.
இதையடுத்து சினிமா கவர்ச்சியை சினிமாவாலேயே சமாளிக்க முடிவு செய்த ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டி, பல முன்னணி நட்சத்திரங்களை காங்கிரசுக்குள் இழுத்து வருகிறார்.
அவரது முயற்சியால் சமீபத்தில் திரைப்பட தம்பதிகளான நடிகர் டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா, கிருஷ்ணா-விஜய நிர்மலா, நகைச்சுவை நடிகர் ஸ்ரீஹரி, சுப்பிரமணியம் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
அதே போல நடிகை கவிதாவும் காங்கிரஸ் சேரவுள்ளதாகத் தெரிகிறது.
இந் நிலையில் தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ள ஜெயசுதா காங்கிரசில் இணைந்துள்ளார். தெலுங்கில் ராமாராவ் உள்ளிட்ட பல பழம்பெரும் நடிகர்களுடன் ஏராளமான படங்களில் ஜோடியாக நடித்தவர். இப்போதும் தெலுங்குத் திரைப்படங்களில் பிஸியாக உள்ளார்.
ஹைதராபாத் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான காந்தி பவனில் நடந்த நிகழ்ச்சியில், ஆந்திர மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டி, மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சினிவாசு ஆகியோர் முன்னிலையில் நடிகை ஜெயசுதா காங்கிரசில் இணைந்தார்.
அவருக்கு முதல்வர் ராஜசேகரரெட்டி மாலை அணிவித்து பூச்செண்டு வழங்கி கட்சியில் இணைத்தார்.
ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு அடித்தளத்தில் வாழும் மக்களுக்கு சேவை புரிவதை நேரில் பார்த்து உணர்ந்த பின் ஏழை, எளிய மக்களின் நலனுக்காக உழைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளதாக ஜெயசுதா தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் அவர் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிடுவார் எனத் தெரிகிறது.