Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தீபாவளி 'சினிமா பஞ்சம்'!
தமிழ்த் திரையுலக வரலாற்றில் இப்படி ஒரு சினிமாப் பஞ்சம் வந்து நீண்ட காலமாகி விட்டது என்று கூறும் வகையில், இந்த தீபாவளிக்கு மொத்தமே 3 படங்கள்தான் வெளியாகின்றன. அந்த மூன்றுமே 2ம் நிலை நடிகர்களின் படங்கள்தான். சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்கள் எதுவும் இந்தத் தீபாவளிக்கு திரைக்கு வரவில்லை.
ஜெகன்மோகினி, ஆதவன், பேராண்மை ஆகிய மூன்று படங்கள் மட்டுமே தீபாவளிக்கு வருகின்றன. அதில் பேராண்மை இன்று ரிலீஸாகிறது. மற்ற இரு படங்களும் நாளைக்கு திரைக்கு வரவுள்ளனவாம்.
பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமே தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது வெளியிடப்பட வேண்டும் என்று சமீபத்தில் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தீர்மானித்தது.
இந்த நிலையில் வரும் முதல் தீபாவளியன்று வெறும் 3 படங்கள் மட்டுமே களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளன.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத் ஆகிய நான்கு பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் திரைக்கு வரவில்லை. ரஜினிகாந்த் எந்திரன் படத்தில் ரொம்ப நாட்களாக நடித்துக் கொண்டிருக்கிறார். கமல்ஹாசன் சமீபத்தில்தான் மெகா ஹிட் படத்தைக் கொடுத்து இப்போதுதான் அடுத்த படம் குறித்த ஆய்வில் உள்ளார்.
விஜய் நடித்த வேட்டைக்காரன் ரெடியாகி விட்டது. அஜீத்தும் அசல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் தீபாவளிக்கு மிகக் குறைந்த அளவிலான படங்கள் வருவதாக திரையுலகில் கூறிக் கொள்கிறார்கள்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள படம் ஆதவன். இயற்கை என்ற நல்ல படத்தைக் கொடுத்த ஜனநாதன் இயக்கியுள்ள படம் பேராண்மை. அதேபோல என்.கே.விஸ்வநாதன் இயக்கியுள்ள படம் ஜெகன்மோகினி. இந்தப் படத்திற்குத்தான் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பெரிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைப்பது போல ஜெகன்மோகினி படத்துக்கு அட்டகாசமாக இசையமைத்துள்ளார் இளையராஜா என்கிறார்கள். மேலும் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அதை விட முக்கியமாக ஒரிஜினல் ஜெகன்மோகினி பயங்கர ஹிட் படம் என்பதால் இந்த ரீமேக்கைப் பார்க்க ரசிகர்களிடையே பெரும் ஆவல் எழுந்துள்ளது.
பேராண்மை கிட்டத்தட்ட 250 திரைகளில் ரிலீஸாகிறதாம். ஆதவன் படத்தை சென்னையில் மட்டும் 15 திரைகளில் வெளியிடுகிறார்களாம்.
அதேபோல தமிழ்ப் படங்களுக்கு இணையான விறுவிறுப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள ஒரு இந்திப் படமும் தீபாவளிக்கு வருகிறது. அது 'ப்ளூ'. இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருது வேட்டைக்குப் பின்னர் இசையமைத்துள்ள முதல் படம் இது என்பதால் இந்த எதிர்பார்ப்பு.
தமிழகம் முழுவதும் 35 திரைகளில் 'ப்ளூ' திரையிடப்படவுள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கது.
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!