Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நலமாக உள்ளார் மணிரத்னம்!
நேற்று முன்தினம் இயக்குநர் மணிரத்னத்துக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மூச்சு விட சிரமப்பட்டார். இதனால் உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர் அவரது குடும்பத்தினர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மணி ரத்னத்துக்கு மிகுந்த கவனத்துடன் சிகிச்சைகள் தரப்படன. நேற்று பிற்பகலுக்குப் பின் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது.
இப்போது அவர் நலமாக உள்ளார் என்றும், இன்னும் இரு தினங்கள் ஓய்வு எடுத்த பிறகு மீண்டும் ராவண் படப்பிடிப்புக்காக கேரளாவின் சாலக்குடி காட்டுக்குப் புறப்படுகிறார் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து விசாரித்தபோது, அவரது மீடியா மேனேஜர் நிகில், இப்போது மணிரத்னம் சார் நல்ல நிலையில் உள்ளார். இன்னும் இரு தினங்களில் வீடு திரும்புகிறார். விரைவில் துவங்கவிருக்கும் இறுதிக்கட்டப் படப்பிடிப்பிலும் அவர் கலந்து கொள்கிறார், என்றார்.
மன உளைச்சல் காரணமா?:
மணிரத்னம் ஏற்கெனவே இருமுறை நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டுள்ளவர். ஆனால் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் அவரது படங்கள் மாட்டிக் கொள்கின்றன. பம்பாய், இருவர், குரு போன்ற படஹ்கள் வெளியாகும் தருணங்களில் அவருக்கு அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. அந்தப் படங்களை சம்பந்தப்பட்ட தலைவர்களிடம் காட்டி, அவர்களின் ஒப்புதலுடன் வெளியிட்டவர் மணிரத்னம்.
இந்த முறை பெரும் பொருட்செலவில் தனது ராவண் படத்தை எடுத்து வருகிறார். ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், விக்ரம் நடிக்கும் இந்தப் படத்தின் கதை விவகாரமானது.
தன்னைக் கட்டிய கணவனின் சுயரூபம் புரிந்து, சிறைப்பிடித்த வில்லனிடமே இறுதியில் மனதைப் பறிகொடுக்கும் ஒரு மனைவியின் கதைதான் ராவண் என்று கூறப்பட, 'ராமாயணத்தை இழிவுபடுத்துவதா?' என இந்துத்துவா அமைப்புகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்த எதிர்ப்புகள் அவருக்கு மன உளைச்சலைத் தந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கடந்த வாரம் இதுகுறித்த செய்திகளே வட இந்திய மீடியாவை பெரிதும் ஆக்கிரமித்திருந்தது குறிப்பிடத்தக்கது.