மெகா டிவியின் மார்கழி ஸ்பெஷல் - மதி நிறை மார்கழி

அந்த வகையில் இறைவழிபாட்டிற்கு உகந்த மார்கழி திங்களினை மதிநிறைந்த நன்நாளாக கடந்த ஆண்டைப்போலவே இந்தாண்டும் சிறப்பாக நேயர்களுக்கு அருள் மழை பொழிந்து வருகிறது மெகா தொலைக்காட்சி.
திருமாலின் பெருமையை உணர்த்தும் ஆண்டாள் பாசுரங்களை 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் பாசுர விளக்கங்களை பரத நாட்டியத்துடன் தொலைக்காட்சி படைப்பாக மெகாடிவி ஒளிபரப்புகிறது.
தமிழின் இசையும், இனிமையும் பறைசாற்றும் வகையில் ஆண்டாள் திருமாலின் மீது கொண்டிருந்த பக்தியை விளக்கும் திருப்பாவை பாசுரங்களை 30 நாட்களுக்கும் மங்கள இசையுடன் ஒளிபரப்பி வருகிறது.
தினமும் காலை 6 மணிக்கு மெகாடிவியில் ஒளிபரப்பாகும் இந்த மதிநிறை மார்கழி நிகழ்ச்சியில், மார்கழி பஜனையை திருவல்லிக்கேணி சௌந்தர்யா ரத்னமாலா குழுவினர் பாடுகின்றனர்.
திருப்பாவை பாசுர விளக்கங்களை செல்வி சுசித்ரா வழங்குகிறர். பாசுர விளக்க பாடலுக்கு ஏற்ப பரதநாட்டிய நடனம் ஆடுகிறார் செல்வி நீரஜா ஸ்ரீநிவாசன்.
மார்கழி திங்கள் முழுவதும் மெகா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது கண்டு மகிழுங்கள்.


Click it and Unblock the Notifications











