பர்கூர் அருகே ரஜினிக்காக அம்மன் கோயிலில் கிடா வெட்டு!

பெரிய கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என்றில்லாமல், கிராம அளவில் உள்ள அம்மன் கோயில்களில் அந்தந்த பகுதி ரசிகர்கள் தொடர்ந்து வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.
கடந்த வாரம் கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூருக்கு அருகில் உள்ள கப்பல்வாடி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீதொட்டில் அம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடும், கிடா வெட்டும் நடந்தது. ஆடுகளை அம்மனுக்கு பலி கொடுத்த ரசிகர்கள் பின்னர் ஊர்ப்பொதுமக்கள் அனைவருக்கும் கறிவிருந்து அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பருகூர் நகர ஒன்றிய தலைமை தளபதி ரஜினிகாந்த் நற்பணிமன்ற
பொறுப்பாளர்கள் பி ஜி சுகுமார், பி கே வினோத்குமார், பிசி பாலகிருஷ்ணன், பி சி ரஜினிரமேஷ், பிவி பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கப்பல்வாடி அதிசயபிறவி ரஜினி மன்ற பொறுப்பாளர்கள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.


Click it and Unblock the Notifications











