அடுத்து, மதுரை புறநகர்!

By Staff

Mayandi Kudumbathar
மாயாண்டி குடும்பத்தார் என்ற பிரமாதமான உணர்ச்சிப் பெருக்குடன் கூடிய படத்தைக் கொடுத்த ராசு மதுரவன் அடுத்த படத்திற்குத் தயாராகி விட்டார். பெயர் - மதுரை புறநகர்.

நடிகர்களை இயக்குவிக்கும் இயக்குநர் பட்டாளத்தை வைத்துக் கொண்டு மதுரவன் இயக்கிய படம் மாயாண்டி குடும்பத்தார்.

உணர்ச்சிமயமான கதையுடன் கூடிய இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக பெண்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது.

இப்படத்தை இயக்கிய ராசு மதுரவன், மாயாண்டி வெற்றிப் படமானதால், தனது குடும்பத்தாருடன் மதுரைக்குச் சென்று அங்குள்ள பாண்டி கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்டார்.

இதைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திற்குத் தயாராகி விட்டார். இதுவும் மதுரைக் கதைக்களம்தான். பெயர் மதுரை புறநகர்.

இப்படத்தின் ஹீரோ அர்ஜூன். நாயகி உள்ளிட்டோரின் தேர்வு நடந்து கொண்டிருக்கிறதாம். ஸ்கிரிப்ட் இறுதியானவுடன் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டுளளனராம்.

இந்தப் படத்தை முடித்த பின்னர் தயாரிப்பில் குதிக்கிறார் ராசு மதுரன். புதிய கம்பெனி ஒன்றைத் தொடங்கி வருடத்திற்கு 2 படங்களை எடுக்கப் போகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X