Don't Miss!
- Finance ஹோம் லோன் வாங்க பெஸ்ட் பேங்க் இதுதான்.. ஏன் தெரியுமா..?
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
நிதிப் பிரச்சினை-தடுமாறும் பாலிவுட்
பல பெரும் பட்ஜெட் படங்களை நிறுத்தி வைக்கவும், பட்ஜெட்டை சுருக்கவும் பாலிவுட் தயாரிப்பாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பொருளாதார நெருக்கடியால், விநியோகஸ்தர்கள்தான் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக இயக்குநர் முகேஷ் பட் கூறுகிறார்.
படம் எடுத்து முடித்தாலும் கூட, அதை வாங்குவோரைக் கண்டுபிடிப்பது சிரமமாகி விட்டது. மேலும் போட்ட பணம் திரும்ப வருமா என்பதிலும் உத்தரவாதம் இல்லை. பொருளாதார வீழ்ச்சியால் தற்போது தயாரிப்பில் இருக்கும் 9 சதவீத படங்கள் அப்படியே நின்று போயுள்ளன.
தயாரிப்பு செலவு, நிர்வாக செலவு, நடிகர்களின் சம்பளம் ஆகியவை தாறுமாறாக உள்ளன. இவற்றுக்கெல்லாம் செலவழித்தால் இவையெல்லாம் திரும்ப வரும் என்பதில் சுத்தமாக உத்தரவாதம் இல்லை. கடைசியில் பெரும் நஷ்டத்தை சம்பாதிப்பது விநியோகஸ்தர்கள்தான் என்றார்.
வெந்த புண்ணில் ஆசிட்டை ஊற்றுவது போல முன்பெல்லாம் தாராளமாக கடன் கொடுத்து வந்த வங்கிகள் இப்போது சினிமா படம் எடுப்போருக்கு கடன் கொடுப்பதில் பெரும் தயக்கம் காட்டுகின்றனவாம்.
இந்த அவல நிலைக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரிப்புத் துறைக்குள் கால் எடுத்து வைத்ததுதான் என்கிறார் முகேஷ் பட். அவர்கள்தான் இந்த அளவுக்கு இன்டஸ்ட்ரி பெரும் சிக்கலை சந்திக்க முக்கிய காரணம்.
இவர்கள் இஷ்டத்திற்கு பணத்தை தண்ணீராக செலவழித்து படம் எடுக்க ஆரம்பித்ததால், உண்மையான தயாரிப்பாளர்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். அவர்கள் படத் தயாரிப்பிலிருந்தே ஓரம் கட்டப்பட்டு விட்டனர்.
நடிகர், நடிகையருக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் சம்பளத்தை பெருமளவில் உயர்த்தியதால், தயாரிப்பாளர்களுக்குத்தான் இப்போது அவதி.
நடிகர், நடிகையரின் சமப்ளத்தைக் கட்டுப்படுத்தியாக வேண்டும். செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த சம்பள உயர்வு கண்டிப்பாக திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்றார்.
நிதிப் பிரச்சினை காரணமாக மிகப் பெரிய அளவில் புரோமோக்களை திட்டமிட்டிருந்த பல பெரிய பட்ஜெட் படத் தயாரிப்பாளர்கள் சுருக்கமாக அவற்றை திட்டமிட்டுள்ளனர்.
கஜினி, ரப் நே பனா தி ஜோடி, சாந்தினி செளக் டு சைனா ஆகியவை, செலவை சுருக்கிய படங்களில் சில.