சென்னையில் செட்டிலான சுதா சந்திரன்!

ஆந்திராவிலிருந்து தமிழுக்கு நடிக்க வந்தவர் சுதா சந்திரன். 80களில் அவர் நடித்து வெளியான மயூரி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விபத்தில் ஒரு காலை இழந்த சுதா சந்திரன், செயற்கைக் காலுடன் அந்தப் படத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல், நடனமும் ஆடி அனைவரையும் வியப்படைய வைத்தார்.
அப்போது செயற்கைக் கால்கள் அவ்வளவாக பிரபலமாக இல்லாத நேரம் என்பதால் சுதா சந்திரனின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து சின்னத் தம்பி பெரிய தம்பி, தாயே நீயே துணை, வசந்தராகம் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்தார் சுத.
இதையடுத்து மும்பைக்கு சென்ற அவர் அங்கு ரவி என்பவரை மணந்து கொண்டு செட்டிலாகி விட்டார். இதையடுத்து அவர் இந்தி டிவி தொடர்களில் நடித்துப் பிரபலமானார்.
இப்போது மீண்டும் தமிழுக்குத் திரும்பியுள்ளார் - ஆனால் டிவி தொடர்கள் மூலமாக.
குட்டி பத்மினியின் கலசம் தொடரில் இவரது வில்லத்தனமான நடிப்பு, அத்தொடரின் நாயகி ரம்யா கிருஷ்ணனை விட பிரபலமாகி விட்டது.
இதையடுத்து தற்போது ராதிகாவின் அரசி தொடரிலும் வில்லத்தனத்தில் கலக்கி வருகிறார்.
இடையில் விஷால் நடித்த சத்யம் படத்திலும் நடித்திருந்தார் சுதா சந்திரன்.
இப்போது ஏகப்பட்ட தமிழ் தொடர்கள் வருவதால் சென்னையிலேயே செட்டிலாகி விட முடிவெடுத்த அவர் சட்டுப் புட்டென்று ஒரு வீட்டை வாங்கி வந்து விட்டாராம்.
இனிமேல் அதிக தமிழ்த் தொடர்களில் நடிப்பேன் என்கிறார் புன்னகையுடன்.


Click it and Unblock the Notifications











