Don't Miss!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஹீரோக்கள் பாடுவதால் பாடகர்களுக்கு ஆபத்தில்லை - சுந்தர் சி பாபு
இப்போதெல்லாம் புதிய படங்களில் குறைந்தது ஒரு பாடலையாவது அந்தப் படத்தின் நாயகர்கள் பாடுவதைக் கவனிக்கலாம்.
இப்போது இன்னும் ஒருபடி மேலே போய், கந்தசாமியில் தனக்கான பாடல்கள் முழுவதையும் தானே பாடிக் கொண்டுள்ளார் நடிகர் விக்ரம்.
இதே நிலை இன்னும் சில படங்களிலும் தொடர்கிறது. இதனால் தொழில்முறையில் பின்னணி பாடும் கலைஞர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சித்திரம் பேசுதடி, அஞ்சாதே படங்களின் இசையமைப்பாளர் சுந்தர் சி பாபுவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் இப்படிக் கூறினார்:
முன்பெல்லாம் கமல்தான் அதிகம் பாடுவார். இப்போது கிட்டத்தட்ட அனைத்து ஹீரோக்களுமே பாடுகிறார்கள்.
ஆனால் இதனால் பாடகர்களின் வாய்ப்புகள் பறிபோய்விடாது. நடிகர்களால் எல்லா படங்களிலும் பாடுவது சிரமமான விஷயம். விளம்பரத்துக்காக ஓரிரு பாடல்களைப் பாடுகிறார்கள். அவ்வளவுதான்.
எஸ்பிபி ஏராளமான படங்களில் ரஜினி, கமலுக்கு கூட (தெலுங்கு) டப்பிங் பேசியுள்ளார். அதற்காக அவர் டப்பிங் கலைஞராகி விடுவாரா... அல்லது நடிகராகத்தான் முடியுமா... அவர் ஒரு பின்னணி பாடகர் என்பதே நிரந்தரம். அப்படித்தான் நடிகர்கள் பாடுவதும், என்றார்.
தற்போது அகம்புறம், மெய்காண், அகராதி படங்களுக்கு இசையமைத்து வரும் சுந்தர் சி பாபு, எக்காரணம் கொண்டும் ரீமிக்ஸ் செய்யக் கூடாது என்பதை கொள்கையாக வைத்துள்ளாராம்.
அடடே...!