Don't Miss!
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஹீரோக்கள் பாடுவதால் பாடகர்களுக்கு ஆபத்தில்லை - சுந்தர் சி பாபு
இப்போதெல்லாம் புதிய படங்களில் குறைந்தது ஒரு பாடலையாவது அந்தப் படத்தின் நாயகர்கள் பாடுவதைக் கவனிக்கலாம்.
இப்போது இன்னும் ஒருபடி மேலே போய், கந்தசாமியில் தனக்கான பாடல்கள் முழுவதையும் தானே பாடிக் கொண்டுள்ளார் நடிகர் விக்ரம்.
இதே நிலை இன்னும் சில படங்களிலும் தொடர்கிறது. இதனால் தொழில்முறையில் பின்னணி பாடும் கலைஞர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சித்திரம் பேசுதடி, அஞ்சாதே படங்களின் இசையமைப்பாளர் சுந்தர் சி பாபுவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் இப்படிக் கூறினார்:
முன்பெல்லாம் கமல்தான் அதிகம் பாடுவார். இப்போது கிட்டத்தட்ட அனைத்து ஹீரோக்களுமே பாடுகிறார்கள்.
ஆனால் இதனால் பாடகர்களின் வாய்ப்புகள் பறிபோய்விடாது. நடிகர்களால் எல்லா படங்களிலும் பாடுவது சிரமமான விஷயம். விளம்பரத்துக்காக ஓரிரு பாடல்களைப் பாடுகிறார்கள். அவ்வளவுதான்.
எஸ்பிபி ஏராளமான படங்களில் ரஜினி, கமலுக்கு கூட (தெலுங்கு) டப்பிங் பேசியுள்ளார். அதற்காக அவர் டப்பிங் கலைஞராகி விடுவாரா... அல்லது நடிகராகத்தான் முடியுமா... அவர் ஒரு பின்னணி பாடகர் என்பதே நிரந்தரம். அப்படித்தான் நடிகர்கள் பாடுவதும், என்றார்.
தற்போது அகம்புறம், மெய்காண், அகராதி படங்களுக்கு இசையமைத்து வரும் சுந்தர் சி பாபு, எக்காரணம் கொண்டும் ரீமிக்ஸ் செய்யக் கூடாது என்பதை கொள்கையாக வைத்துள்ளாராம்.
அடடே...!