Don't Miss!
- News கோவை, தஞ்சாவூர், திருவாரூர்.. தாகம் தீர்க்கும் மின்வாரிய அணைகள்.. குடிநீர் வடிகால் வாரியம் அதிரடி
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பிரகாஷ் ராஜ் இயக்கிய முதல் கன்னடப் படம்-125 நாள் ஓடி சாதனை
நானு நன்ன கனசு என்ற பெயரில் கன்னடத்தில் ஒரு படத்தை இயக்கினார் பிரகாஷ் ராஜ். இது அவரது இயக்கத்தில் வெளியான முதல் கன்னடப் படம். இப்படம் இப்போது 125 நாட்களைத் தொட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படி 100 நாட்களுக்கு மேல் ஒரு படம் கன்னடத்தில் ஓடுவது பெரிய சாதனையாகும். இந்த வருடத்தில் ஆப்தமித்ரா படம்தான் 100 நாட்களைத் தாண்டி ஓடியிருந்தது. 2வது படம் பிரகாஷ் ராஜின் படமாகும்.
இதையடுத்து விழா எடுத்து விருந்தளித்துக் கொண்டாடியுள்ளனர் நானு நன்ன கனசு பட யூனிட்டார்.
இந்தப் படத்திற்கு பெங்களூரில் தியேட்டர்கள் சரியாக கிடைக்காமல் அவதிப்பட்டுள்ளார் பிரகாஷ் ராஜ். இதுகுறித்து அவர் கூறுகையில், கேஜி சாலையில் (கெம்பே கெளடா சாலை) உள்ள தியேட்டர்களை சில விநியோகஸ்தர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதனால் அங்கு அவர்கள் வைத்ததுதான் சட்டமாக உள்ளது. இது தவிர்க்கப்பட வேண்டும். பெங்களூரில் நிறைய தியேட்டர்கள் கட்டப்பட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற நிலை மாறும்.
படத்தை எடுத்து விட்டு தியேட்டர் கிடைக்காமல் காத்திருந்தால் என்ன புண்ணியம் என்றார் அவர்.