Don't Miss!
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Sports மச்சக்காரன்யா நீ.. ஒரு போட்டிக்கு 3 கோடி சம்பளம்! ஒரு விக்கெட்டுக்கு 2.4 கோடி.. தீபக் சாஹரின் யோகம்
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பிரகாஷ் ராஜ் இயக்கிய முதல் கன்னடப் படம்-125 நாள் ஓடி சாதனை
நானு நன்ன கனசு என்ற பெயரில் கன்னடத்தில் ஒரு படத்தை இயக்கினார் பிரகாஷ் ராஜ். இது அவரது இயக்கத்தில் வெளியான முதல் கன்னடப் படம். இப்படம் இப்போது 125 நாட்களைத் தொட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படி 100 நாட்களுக்கு மேல் ஒரு படம் கன்னடத்தில் ஓடுவது பெரிய சாதனையாகும். இந்த வருடத்தில் ஆப்தமித்ரா படம்தான் 100 நாட்களைத் தாண்டி ஓடியிருந்தது. 2வது படம் பிரகாஷ் ராஜின் படமாகும்.
இதையடுத்து விழா எடுத்து விருந்தளித்துக் கொண்டாடியுள்ளனர் நானு நன்ன கனசு பட யூனிட்டார்.
இந்தப் படத்திற்கு பெங்களூரில் தியேட்டர்கள் சரியாக கிடைக்காமல் அவதிப்பட்டுள்ளார் பிரகாஷ் ராஜ். இதுகுறித்து அவர் கூறுகையில், கேஜி சாலையில் (கெம்பே கெளடா சாலை) உள்ள தியேட்டர்களை சில விநியோகஸ்தர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதனால் அங்கு அவர்கள் வைத்ததுதான் சட்டமாக உள்ளது. இது தவிர்க்கப்பட வேண்டும். பெங்களூரில் நிறைய தியேட்டர்கள் கட்டப்பட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற நிலை மாறும்.
படத்தை எடுத்து விட்டு தியேட்டர் கிடைக்காமல் காத்திருந்தால் என்ன புண்ணியம் என்றார் அவர்.