Don't Miss!
- News அவ்வளவு தான்.. அதிபர் பதவியை இழக்கும் முய்சு? வெடித்த ஊழல் புகார்.. மாலத்தீவில் பெருங்குழப்பம்
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Technology Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்.. Phonepe-க்கும் அதே கதி.. என்ன ஆச்சு!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
பிரகாஷ் ராஜ் இயக்கிய முதல் கன்னடப் படம்-125 நாள் ஓடி சாதனை
நானு நன்ன கனசு என்ற பெயரில் கன்னடத்தில் ஒரு படத்தை இயக்கினார் பிரகாஷ் ராஜ். இது அவரது இயக்கத்தில் வெளியான முதல் கன்னடப் படம். இப்படம் இப்போது 125 நாட்களைத் தொட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படி 100 நாட்களுக்கு மேல் ஒரு படம் கன்னடத்தில் ஓடுவது பெரிய சாதனையாகும். இந்த வருடத்தில் ஆப்தமித்ரா படம்தான் 100 நாட்களைத் தாண்டி ஓடியிருந்தது. 2வது படம் பிரகாஷ் ராஜின் படமாகும்.
இதையடுத்து விழா எடுத்து விருந்தளித்துக் கொண்டாடியுள்ளனர் நானு நன்ன கனசு பட யூனிட்டார்.
இந்தப் படத்திற்கு பெங்களூரில் தியேட்டர்கள் சரியாக கிடைக்காமல் அவதிப்பட்டுள்ளார் பிரகாஷ் ராஜ். இதுகுறித்து அவர் கூறுகையில், கேஜி சாலையில் (கெம்பே கெளடா சாலை) உள்ள தியேட்டர்களை சில விநியோகஸ்தர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதனால் அங்கு அவர்கள் வைத்ததுதான் சட்டமாக உள்ளது. இது தவிர்க்கப்பட வேண்டும். பெங்களூரில் நிறைய தியேட்டர்கள் கட்டப்பட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற நிலை மாறும்.
படத்தை எடுத்து விட்டு தியேட்டர் கிடைக்காமல் காத்திருந்தால் என்ன புண்ணியம் என்றார் அவர்.