Don't Miss!
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- News ஸ்டாலின் கேட்ட கேள்வி! மேஜையில் இருந்த உளவுத்துறை ரிப்போர்ட! 40ல் வெற்றி உறுதி.. ஆனா.. ஒரு சிக்கலாமே
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ப்ளாக்கை நிறுத்திவிடுவேன்!-கமெண்ட்களால் அமிதாப் கோபம்
அமிதாப் பச்சன் வலைப்பக்கம் மிகப் பிரபலமான ஒன்று. தொடர்ந்து பல்வேறு விஷயங்கள் குறித்து அதில் எழுதி வருகிறார்.
சமீபத்தில் முதுகுவலியால் பாதிக்கப்பட்டது, தனது மருமகள் ஐஸ்வர்யா ராய்க்கு காய்ச்சல் ஏற்பட்டது, நண்பர் அமர்சிங் உடல் நிலை பாதிக்கப்பட்டது என தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகி வரும் அமிதாப்பை, மோசமான கமெண்ட்கள் எழுதி மேலும் கடுப்பேற்றுகிறார்கள் அவரது ப்ளாக்கைப் படிக்கும் சில நபர்கள்.
இதுகுறித்து அமிதாப் இப்படி எழுதியுள்ளார்:
எனது உடல்நிலை மற்றும் நண்பர்களின் உடல் நிலை குறித்து செக்கப்புகளுக்காக மருத்துவமனை போய், வழியில் மருந்துக் கடையில் தேவையான மருந்துகளை வாங்கிக் கொண்டு, முதுகுவலிக்காக ஜிம் ஆலோசனைகள் பெற்று வீட்டுக்கு வந்து ப்ளாக்கைத் திறந்தால் மோசமான கமெண்டுகளுக்கு கனத்த இதயத்துடன் பதிலளிக்க வேண்டிய நிலை.
ஒரு பொதுவான கருத்துப் பரிமாற்ற மேடையை தனி நபர் மற்றும் உறவுகள் குறித்த அசிங்கமான கருத்துரைகளை அரங்கேற்றும் இடமாக மாற்றியுள்ளீர்கள். இது என் விலாவில் குத்துவதைப் போன்றது.
ஒவ்வொரு மோசமான கமெண்டையும் படிக்கும் போது எனக்குத் தோன்றுவது இதுதான்... ஒன்று நீங்கள் நிறுத்த வேண்டும்... அல்லது நான் நிறுத்திக் கொள்கிறேன்., என அமிதாப் கூறியுள்ளார்.