Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எனது அடுத்த படம் தென்கிழக்குச் சீமையிலே!-பாரதிராஜா
தெற்கத்திப் பொண்ணு தொடரின் 500வது நாள் விழாவில், முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இதனை அறிவித்தார் பாரதிராஜா. விழாவில் அவர் பேசியதாவது:
என் 35 ஆண்டுகால உழைப்பில் கிடைக்காத பெயரும், புகழும் 2 ஆண்டுகளாக உழைத்துக் கொண்டிருக்கும் இந்த தொடரில் கிடைத்திருக்கிறது.
நான் மூன்று முதல்வர்களிடம் பழகியிருக்கிறேன். தமிழர்களின் முதல்வர் கருணாநிதி மட்டுமே. நான் அவரைப் பார்க்கும்போது அவரது நாற்காலியை பார்க்க மாட்டேன். அவர் முகத்தை, அனுபவத்தை, ஆற்றலை மட்டுமே பார்ப்பேன்.
முதல்வர் கருணாநிதியிடம் முட்டி மோதிய காலகட்டத்தில் கூட, 'நீ என்ன வேணும்னாலும் பண்ணு. என்னில் இருக்கும் உன்னை எடுக்க முடியாது' என்கிற மாதிரியே நடந்துகொண்டார். இப்படியொரு மனம் அவருக்கு மட்டும்தான் உண்டு. அவர் என் பிள்ளைகள் திருமணத்தையும் நடத்திக் கொடுத்தவர். எனக்கு அப்பன் இல்லை. அப்பனாக இருந்து என் பிள்ளைகள் திருமணத்தை நடத்தி தந்து என்னை பெருமைப்படுத்தியவர்.
என் கலை வாழ்வில் ஒரு பதிவு வேண்டும் என்பதற்காகவே இந்த விழாவில் நீங்கள் வாழ்த்த வேண்டும் என்று அழைத்தேன். உங்கள் வாழ்த்து கிடைத்ததை என் பிள்ளைகளின் பிள்ளைகளும் அவர்கள் தலைமுறை வரைக்கும் பேசிக் கொண்டிருப்பார்கள்.
நான் அடுத்து தென் கிழக்கு சீமையிலே, குற்றப்பரம்பரை என 2 படங்களை இயக்கவிருக்கிறேன். இவை இரண்டும் தமிழர் வாழ்வின் மறக்க முடியாத பதிவுகளாக இருக்கும். தென்கிழக்குச் சீமையிலே படத்தை விரைவில் ஆரம்பிக்க உள்ளேன். இந்த 2 படங்களும் வெளியாகி இரண்டுக்கும் முதல்வர் கையால் விருது வாங்கவேண்டும். இதுவே என் இப்போதைய ஆசை..." என்றார்.
நடிகை குஷ்பு, ரோஜா, தயாரி்ப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!