Don't Miss!
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண கோரிய வழக்கு.. நாளை வரும் இடைக்கால உத்தரவு! இது ஏன் முக்கியம்?
- Automobiles உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ராமாராவின் மரணத்துக்கு காரணமான நாயுடுவுக்கா ஓட்டு?-சிரஞ்சீவி
ஆந்திர மாநிலம் விஜய வாடா என்.டி.ராமராவ் சர்க்கிளில் நடிகர் சிரஞ்சீவி பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
ஆந்திர மக்கள் வறுமையில் செத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு காரணம் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளின் முறைகேடான ஆட்சிகள்தான்.
மக்களின் வறுமையை ஒழிக்க இந்தக் கட்சிகள் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை.
நாட்டில் 60 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது காங்கிரஸ்தான். ஆனால் அப்போதெல்லாம் ஒன்றுமே செய்யாமல் சும்மா இருந்துவிட்டு, இப்போது வறுமையை ஒழிப்பதாக ராகுல் காந்தி கூறிவருவது ஏமாற்று வேலை.
தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு எனக்கு திறமை எதுவும் இல்லை என்று கூறி வருகிறார். திறமை இல்லாமலா நான் 30 ஆண்டுகள் தெலுங்கு திரையுலகில் மெகா ஸ்டாராக இருந்தேன்?
சந்திரபாபு நாயுடு அளித்துள்ள தேர்தல் வாக்குறுதி அனைத்தும் பொய்யானவை, ஒருபோதும் அமல்படுத்த முடியாதவை.
மோசடி செய்வதிலும், பொய் கூறுவதிலும் சந்திரபாபு நாயுவை மிஞ்ச ஆளில்லை. ஆந்திர மக்களின் நம்பிக்கை நாயகனாகத் திகழ்ந்த என்டி ராமாராவின் பதவியை நயவஞ்சகமாகப் பறித்து, அவரது உயிருக்கே உலை வைத்தவர்தான் சந்திரபாபு நாயுடு.
இந்தமாதிரி ஒருவர் மீண்டும் முதல்வரானால், ஆந்திரா படுகேவலமான நிலைக்குப் போய்விடும். என பிரஜா ராஜ்யத்தை ஆதரியுங்கள், என்றார் சிரஞ்சீவி.