Don't Miss!
- Sports ரோஹித்துக்கு விசுவாசமாக இருந்த வீரரை அணியை விட்டே நீக்கிய ஹர்திக் பாண்டியா? கதறும் ரசிகர்கள்
- News பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீதான வழக்கு ரத்தா? ஒத்திவைத்த ஹைகோர்ட்
- Technology OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
- Lifestyle இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
காமன்வெல்த் பாடல்-'ட்ரிம்' செய்த ரஹ்மான்!
ஓ யாரோ யே இந்திய புலாலியே என்று தொடங்கும் காமன்வெல்த் போட்டிக்கான மையநோக்குப் பாடலுக்கு ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஆனால் இப்பாடல் யாரையும் கவரவில்லை என்று முனுமுனுப்பு எழுந்தது. இப்பாடலை எழுதியவர் பிரசூன் ஜோஷி ஆவார்.
இந்த நிலையில் தற்போது இப்பாடலில் சில நகாசு வேலைகளை செய்து புது மெருகூட்டியுள்ளார் ரஹ்மான். இதை ஜோஷியே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எப்போதுமே தனது படைப்புகள் சிறப்பாக இருக்க வேண்டும் என கருதுபவர் ரஹ்மான். காமன்வெல்த் மைய நோக்குப் பாடலுக்கும் இது பொருந்தும். இப்பாடலை தற்போது மேலும் மெருகூட்டியுள்ளார் ரஹ்மான். நிறைய நாட்டுப்புற இசைக் கருவிகளை சேர்த்துள்ளார். இதன் மூலம் பாடல் ட்ரிம் ஆகி, மேலும் அழகாககியுள்ளது.
விரைவில் திருத்தப்பட்ட பாடலின் வீடியோ பதிப்பு வெளியிடப்படும். இதில் விளையாட்டு வீரர், வீராங்கனைகள், அவர்களின் சாதனைகள் விவரிக்கப்பட்டிருக்கும் என்றார் ஜோஷி.
முன்பு போடப்பட்ட பாடல் திருப்திகரமாக இல்லை என்று அமைச்சர்கள் குழு கருத்து தெரிவித்ததாக விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ். கில் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இந்தப் பாடலை உருவாக்க ஆறு மாதங்களை எடுத்துக் கொண்டார் ரஹ்மான். இதற்காக அவருக்கு ரூ. 5 கோடி கட்டணம் தரப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.