Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
திரைவடிவம் பெறும் 'கலைஞர்' வரலாறு!
காலத்தின் மாற்றம், மக்களின் மாறும் ரசனைகளுக்கேற்ப தன் எழுத்துப் பாணியிலும் புதிய மாறுதல்களைப் புகுத்தி ரசிக்க வைத்த மாபெரும் கலைஞர் அவர் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.
அரசியலில் அவரது அனுபவமே மிகப் பெரிய பாடம். பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கிய மிகச் சிறந்த திரைக்கதை என்றால் அது கலைஞரின் வாழ்க்கையாகத்தான் இருக்கும்.
அந்த திரைக்கதையை இப்போது படமாக எடுக்க கலைஞரின் அபிமானிகள் சிலர் முயன்று வருகின்றனர்.
இந்தப் படத்தை இயக்கப்போகிறவர் அறிமுக இயக்குநர் ஜி.சக்தி. இந்தப் படத்துக்காக கடந்த 2 ஆண்டுகளாக கலைஞரின் வாழ்க்கை குறித்து ஆராய்ச்சியே நடத்தியிருக்கிறாராம் சக்தி.
இந்தப் படத்துக்கு இளையராஜாவைத் தவிர வேறு யாரிடமும் இசைக்காக அணுகப் போவதில்லை என ஆரம்பத்திலேயே கூறிவிட்டாராம் சக்தி. அதைத் தெரிந்து கொண்டாரோ என்னமோ... சக்தி கேட்டதும் உடனடியாக ஓகே சொல்லிவிட்டாராம் ராஜா.
படத்துக்குத் தலைப்பு என்ன தெரியுமா... 'கலைஞர்'!