twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    6 மாதத்தில் 30 திரைகளைத் திறக்கும் பிவிஆர்!

    By Staff
    |

    PVR
    இந்தியாவின் மிகப் பெரிய திரை வலையமைப்பான பிவிஆர், அடுத்து வரும் 6 மாதங்களில் 30 முதல் 40 திரைகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாம்.

    இதுகுறித்து நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சிப் பிரிவு துணைத் தலைவர் விஜய் கபூர் மும்பையில், செய்தியாளர்களிடம் பேசுகையில், அடுத்த ஆறு மாதங்களில் ரூ. 1.5 - ரூ. 1.7 கோடி முதலீட்டில் 30 முதல் 40 திரைகளை அதிகரிக்கவுள்ளோம்.

    ஒட்டுமொத்தமாக திரையரங்க மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ. 30 முதல் 40 கோடியை கொட்டவுள்ளோம் என்றார்.

    பிரியா எக்சிபிட்டார்ஸ் பிரைவேட் லிமிட்டெட் மற்றும் வில்லேஜ் ரோட்ஷோ லிமிட்டெட் நிறுவனங்கள் இணைந்து நடத்துவதுதான் பிவிஆர் திரையரங்க வளாகங்கள். 1997ம் ஆண்டு முதல் பிவிஆர் திரையரங்குகள் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றன.

    2010ம் ஆண்டுக்குள் 250 திரைகளை தங்களது பட்டியலில் இணைக்க பிவிஆர் திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ. 400 கோடி வரை முதலீடு செய்யவும் அது திட்டமிட்டுள்ளது.

    தற்போது டெல்லி, பரீதாபாத், கர்கான், லூதியானா, காஸயாபாத், மும்பை, பெங்களூர், ஹைதராபாத், லக்னோ, இந்தூர், அவுரங்காபாத், பரோடா, லத்தூர் ஆகிய இடங்களில் 108 திரைகளுடன் கூடிய 28 தியேட்டர்கள் பிவிஆர் வசம் உள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X