முதல்வரை சந்தித்த ஏ.ஆர்.ரஹ்மான்

சுமார் அரைமணிநேரம் நடந்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தரத்தில் கேஎம் மியூசிக் கன்சர்வேட்டரி எனும் பெயரில் இசைக் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகம் அமைக்கும் பணியில் தற்போது மும்முரமாக இறங்கியுள்ளார் ரஹ்மான். இந்த இசைக் கல்லூரியின் நிறுவனர் மற்றும் முதல்வராகவும் செயல்படுகிறார். தற்போது கோடம்பாக்கத்தில் தற்காலிக கட்டடத்தில் இயங்கிவரும் இந்த இசைக் கல்லூரி, விரைவில் மீனம்பாக்கம் அருகே கட்டப்பட்டு வரும் வளாகத்துக்கு மாறப்போகிறது.
இந்த இசைக் கல்லூரி கட்டுமானப் பணிகளுக்கான அரசின் அனுமதி மற்றும் மற்றும் துவக்க விழா குறித்து முதல்வரிடம் கலந்து பேசவே ரஹ்மான் இன்று கோபாலபுரம் இல்லத்தில் கலைஞரைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
Comments


Click it and Unblock the Notifications