Don't Miss!
- News லோக்சபா தேர்தல் முடிந்தாலும்.. தமிழகத்தில் சில இடங்களில் பறக்கும் படை சோதனை தொடருமாம்! ஏன் தெரியுமா
- Sports மினி சென்னையில் ஆடினோம்.. 2 நாளில் இதை விட அதிகமாக இருக்கும்.. மனம் திறந்து சொன்ன கே எல் ராகுல்
- Automobiles இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வளர்ப்பு மகள் கல்யாண தோஷம் நீங்க கொடுமுடியி்ல சரோஜாதேவி பரிகாப பூஜை
சரோஜாதேவியின் தங்கை ஹேமா. இவரது மகள்தான் இந்திரா பரமேஸ்வரி. இவரை சரோஜா தேவி தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
இந்திரா பரமேஸ்வரிக்கு திருமணத் தோஷம் இருப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து திருமணத் தடை நீங்குவதற்காக கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் பரிகார பூஜை நடத்த சரோஜாதேவி முடிவெடுத்தார்.
அதன்படி சரோஜாதேவி, தங்கை ஹேமா, இந்திரா பரமேஸ்வரி ஆகியோர் கார் மூலம் பெங்களூரிலிருந்து கொடுமுடி வந்தனர்.
சரோஜாதேவியை பார்த்ததும் ரசிகர்களும் பக்தர்களும் அவரை நோக்கி உற்சாகமாக கையை அசைத்தனர். பதிலுக்கு புன்னகையுடன் சரோஜாதேவியும் கையசைத்தார்.
சரோஜாதேவியை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ரத்தினசபாபதி, செயல் அலுவலர் மற்றும் ஊழியர்கள் வரவேற்றனர்.
பிறகு கோவிலையொட்டி உள்ள காவிரி ஆற்றில் சரோஜாதேவி, மகள் இந்திரா பரமேஸ்வரி மற்றும் உடன் வந்த உறவினர்கள் புனித நீராடினர். பின்னர் வளர்ப்பு மகளின் திருமண தடை நீக்க பரிகார பூஜை நடந்தது. இதில் சரோஜாதேவி கலந்து கொண்டார்.
ஹோமகுண்டம் வளர்த்து தோஷ பரிகார நிவர்த்தி செய்தார். 3 மணி நேரம் இந்த பூஜை நடந்தது.