Don't Miss!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்திய அழகி மிஸ் தெ. ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்காவின் சன் சிட்டியில் நடந்த கண்கவர் நிகழ்ச்சியில் டட்டும் கேஷ்வர் இப்பட்டத்தை வென்றார். இவர் ஒரு மாடல் அழகியாவார்.
சைக்காலஜி படித்துள்ள டட்டுமுக்கு வயது 24. கடந்த 2005ம் ஆண்டும் இவர் மிஸ் தென் ஆப்பிரிக்கா போட்டியில் இருந்தார். ஆனால் அப்போது நழுவிப் போன பட்டத்தை இந்த ஆண்டு கெட்டியாகப் பிடித்து விட்டார் டட்டும்.
2005ம் ஆண்டின் சிறந்த மாடல் அழகியாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டவர் டட்டும். ஆனால் மிஸ் தென் ஆப்பிரிக்க அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறினார்.
அடுத்த ஆண்டு ஜோஹன்ஸ்பர்க்கில் நடைபெறும் மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டியில், தென் ஆப்பிரிக்காவின் சார்பில் டட்டும் கலந்து கொள்வார். ஆக, இந்திய அழகிகள் இருவர் அடுத்த ஆண்டு மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டியில் இடம் பெறப் போவது உறுதியாகி விட்டது.
சமீபத்தில் முடிந்த மிஸ் வேர்ல்ட் போட்டியின் இறுதிச் சுற்றின்போது டட்டும சான்ட்டான் அரங்குக்கு வந்திருந்தார். இந்திய அழகி பார்வதி ஓமனக்குட்டன் 2வது இடத்தைப் பிடித்ததை ஏமாற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாராம்.
சன் சிட்டி தனக்கு சிறந்த பரிசைக் கொடுத்துள்ளதாகவும், அந்த மறக்க முடியாத நினைவுகளுடன் சொந்த ஊரான டர்பன் திரும்பப் போவதாகவும் கூறினார் டட்டும்.
அரசியலிலும் டட்டுமுக்கு நல்ல ஆர்வம் உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் அடுத்த ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் வெற்றி பெற்று புதிய ஆட்சி அமைந்ததும், புதிய அதிபரை தான் சந்திக்கவுள்ளதாக தெரிவித்தார் டட்டும்.
புதிய அதிபரை சந்திக்கும்போது, இளைஞர்களுக்கு அரசியலில் அதிக முக்கியத்துவம், பங்கு அளிக்க வேண்டும் என வற்புறுத்தப் போவதாக கூறுகிறார் டட்டும்.
-
யுவன் ஷங்கர் ராஜா எடுத்த அதிரடி முடிவு.. ரசிகர்கள் ஷாக்.. அனைத்துக்கும் காரணம் GOAT பாடல்?
-
புஷ்பா 2 ஓடிடி உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?.. பல டாப் நடிகர்கள் லைஃப் டைம் வசூலே இவ்ளோ இல்லையே!
-
Baakiyalakshmi: வீட்டில் வாமிட் சத்தம் கேக்கனும்.. எழிலிடம் மல்லுகட்டிய ஈஸ்வரி.. இதுலதான் ட்விஸ்ட்!