Don't Miss!
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- News பள்ளி திறப்பு தள்ளிவைப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய ஆலோசனை.. மாணவர்களுக்கு வரும் குட்நியூஸ்?
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்திய அழகி மிஸ் தெ. ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்காவின் சன் சிட்டியில் நடந்த கண்கவர் நிகழ்ச்சியில் டட்டும் கேஷ்வர் இப்பட்டத்தை வென்றார். இவர் ஒரு மாடல் அழகியாவார்.
சைக்காலஜி படித்துள்ள டட்டுமுக்கு வயது 24. கடந்த 2005ம் ஆண்டும் இவர் மிஸ் தென் ஆப்பிரிக்கா போட்டியில் இருந்தார். ஆனால் அப்போது நழுவிப் போன பட்டத்தை இந்த ஆண்டு கெட்டியாகப் பிடித்து விட்டார் டட்டும்.
2005ம் ஆண்டின் சிறந்த மாடல் அழகியாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டவர் டட்டும். ஆனால் மிஸ் தென் ஆப்பிரிக்க அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறினார்.
அடுத்த ஆண்டு ஜோஹன்ஸ்பர்க்கில் நடைபெறும் மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டியில், தென் ஆப்பிரிக்காவின் சார்பில் டட்டும் கலந்து கொள்வார். ஆக, இந்திய அழகிகள் இருவர் அடுத்த ஆண்டு மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டியில் இடம் பெறப் போவது உறுதியாகி விட்டது.
சமீபத்தில் முடிந்த மிஸ் வேர்ல்ட் போட்டியின் இறுதிச் சுற்றின்போது டட்டும சான்ட்டான் அரங்குக்கு வந்திருந்தார். இந்திய அழகி பார்வதி ஓமனக்குட்டன் 2வது இடத்தைப் பிடித்ததை ஏமாற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாராம்.
சன் சிட்டி தனக்கு சிறந்த பரிசைக் கொடுத்துள்ளதாகவும், அந்த மறக்க முடியாத நினைவுகளுடன் சொந்த ஊரான டர்பன் திரும்பப் போவதாகவும் கூறினார் டட்டும்.
அரசியலிலும் டட்டுமுக்கு நல்ல ஆர்வம் உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் அடுத்த ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் வெற்றி பெற்று புதிய ஆட்சி அமைந்ததும், புதிய அதிபரை தான் சந்திக்கவுள்ளதாக தெரிவித்தார் டட்டும்.
புதிய அதிபரை சந்திக்கும்போது, இளைஞர்களுக்கு அரசியலில் அதிக முக்கியத்துவம், பங்கு அளிக்க வேண்டும் என வற்புறுத்தப் போவதாக கூறுகிறார் டட்டும்.