Don't Miss!
- News விவசாய நிலங்கள்.. கோடிக்கணக்கில் சொத்து.. அமித்ஷாவின் ஆண்டு வருமானம் மட்டும் எவ்வளவு தெரியுமா?
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
மோகினி கிளைமாக்ஸ் மாற்றம்!
செல்வராகவனின் உதவியாளரான ஜவஹர் இயக்கத்தில், தனுஷ், நயனதாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் யாரடி நீ மோகினி. படம் குறித்து பொதுவாக பாசிட்டிவான பேச்சு நிலவுகிறது. இருப்பினும் கிளைமாக்ஸ் சரியில்லை என்று விமர்சனங்கள் எழுதந்துள்ளன.
இதையடுத்து கிளைமாக்ஸை மாற்றுமாறு ஜவஹரை கஸ்தூரி ராஜா கேட்டுக் கொண்டாராம். இதையடுத்து தெலுங்கில் இதே கிளைமாக்ஸை வைத்தவரான இயக்குநர் செல்வராகவனிடம் ஆலோசனை செய்துள்ளார் ஜவஹர். இதையடுத்து அவரது ஆலோசனைப்படி கிளைமாக்ஸை அவர் மாற்றியுள்ளதாக தெரிகிறது.
செல்வராகவன் தெலுங்கில் இயக்கிய அடவரி மடலுக்கு அர்த்தலே வெருளே படத்தின் ரீமேக்தான் யாரடி நீ மோகினி. தெலுங்கில் இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. தமிழிலும் சூப்பர் ஹிட் ரேஞ்சை எட்டிக் கொண்டிருக்கிறது.
இருப்பினும் கிளைமாக்ஸில் நயனதாரவும், தனுஷும் கல்யாணம் செய்து கொள்வது போல இருந்தால் நன்றாக இருக்கும் என பல தரப்பினரும் கருத்து தெரிவித்தனராம். இதையடுத்தே கிளைமாக்ஸை மாற்ற வேண்டும் என்று கஸ்தூரி ராஜா விரும்பினாராம்.
தற்போது சில காட்சிகளை எடிட் செய்து, புதிதாக சில காட்சிகளை சேர்த்து, நயனதாராவின் பெற்றோர் விருப்பப்படி அவரை தனுஷ் மணப்பது போல காட்சியை மாற்றியுள்ளனராம்.