Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஹீரோவா, ஜீரோவா? - குறும்படம் ரிலீஸ்
இந்த படத்தில் சூர்யா, விஜய், மாதவன், ஜோதிகா ஆகியோர் நடித்துள்ளனர். ப்ரியா இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். நா.முத்துக்குமார் பாடல் எழுதியுள்ளார். கே.வி.ஆனந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்தார். கலை இயக்கத்தைக் கவனித்தவர் ராஜேந்திரன்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கேட்டுக் கொண்டதன்படி இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஐந்து நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படத்தில் குழந்தை கல்வி, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் கல்வி, பள்ளி இடை நிற்றலை முழுவதுமாக நிறுத்துவது, குழந்தை கல்வி குறித்து பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகிய கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
'படித்தவர்கள்தான் நிஜ ஹீரோ. இப்போ சொல்லுங்க, நீங்க ஹீரோவா? ஜீரோவா?' என்று குழந்தைகளிடம் கேட்பதுபோல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. படத்தில் நடித்துள்ள பிரபலங்கள் ஒரு பைசா கூட வாங்காமல் சேவை நோக்குடன் நடித்துக் கொடுத்துள்ளனர்.
இந்த படத்தை நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையும், அமைச்சர் தங்கம் தென்னரசுவும் இணைந்து நேற்று வெளியிட்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, அகரம் அறக்கட்டளையின் ஒவ்வொரு முயற்சியும் சேவை மனப்பான்மை மட்டுமில்லாமல் சமுதாய முன்னேற்றத்துக்காவும் எடுக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையிலும் நாம் இன்னும் 100 சதவீத கல்வியை எட்டமுடியாத நிலையில் இருக்கிறோம் என்பது அவமானமாகும் என்று கூறினார்
அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், இந்த குறும்படம் மக்கள் கூடும் முக்கிய இடங்களில் திரையிடப்படும். இதை பார்த்து மக்கள் நிச்சயம் விழிப்பு பெறுவார்கள் என்று கூறினார்.
படப்பிடிப்பில் இருந்த மாதவன் இந்த விழாவுக்காக வந்திருந்தார். குறைச்சலாக பேசி விட்டு சென்றார்.
இயக்குநர் மணிரத்தினம், ரோஷினி, தாமஸ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!