Don't Miss!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எக்கோ நிறுவனம் மீது போலீஸில் இளையராஜா புகார்!
அதாவது விஞ்ஞான முன்னேற்றங்கள் ஏதுமில்லாத காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தம். இன்று இசைத்தட்டு வடிவத்தைத் தாண்டி, சிடி, சிப், இன்டர்நெட், எஃப்எம், ரிங்டோன்ஸ் என பல பரிமாணங்களில் பணம் பார்க்கிறார்கள் அந்த இசையை வைத்து.
இன்று வெறும் 10 ரூபாய்க்கு ஒரு எம்பி 3 சிடி கிடைக்கிறது. ஆனால் இசைஞானியின் அந்த பொற்காலப் பாடல்கள் அடங்கிய சிடிக்கு எக்கோ நிறுவனம் வைத்திருக்கும் விலை ரூ 200. அதுவும் 16 பாடல்கள்தான்!
ஆனால் இதில் இளையராஜாவுக்கு நயா பைசா ராயல்டி கிடையாதாம். கண்ணெதிரே தனது இசையை வைத்து மாபெரும் கொள்ளை நடப்பதைப் பார்த்துப் பொறுக்காத ராஜா, தனது இசைக்கான காப்பிரைட் உரிமையை மொத்தமாக மலேஷிய நிறுவனத்துக்கு எழுதிக் கொடுத்துவிட்டார்.
ஆனாலும் எக்கோகாரர்கள் பிடிவாதமாக ராஜாவின் பழைய பாடல்களை சிடி அடித்து விற்று வருகிறார்கள். இதனால் கோபமடைந்த இளையராஜா, சட்டத்துறை வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி, எக்கோ நிறுவனம் மீது புகார் தர முடிவு செய்தார்.
அதன்படி இன்று காலை சென்னை காவல்துறை ஆணையரைச் சந்தித்து எக்கோ நிறுவனம் மீது எழுத்து மூலம் புகார் அளித்துள்ளார்.
எக்கோ நிறுவனத்தின் உரிமையாளர் அமெரிக்காவில் வசிப்பவர். பெயர் பார்த்தசாரதி. இந்த நிறுவனத்தின் நிர்வாகிகளிடமும் உரிமையாளரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது காவல்துறை.