Don't Miss!
- Automobiles விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- Lifestyle வெயில் காலத்தில் உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்க தினமும் எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்கணும் தெரியுமா?
- Technology ஏப்ரல் 24 உறுதி.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 256ஜிபி மெமரி.. Flat டிஸ்பிளே.. எந்த போன்?
- Sports ஹர்திக் பாண்டியா கதையை முடிக்கப் போகும் தோனி - ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் என்ன நடக்கிறது?
- News இந்த கருப்பு வெள்ளை படத்தில் யானை எங்க இருக்குனு 5 செகன்டுல கண்டுபிடியுங்க! ஈஸிதான்! ஆனாலும் கஷ்டம்
- Finance விப்ரோ: அசிம் பிரேம்ஜி, ரிஷாத் பிரேம்ஜி-க்கு மீண்டும் முக்கிய பதவி.. அடுத்த 5 வருடத்திற்கு அசைக்க முடியாது.
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'நேபாளி'க்கு போலீஸ் நோட்டீஸ்!
பரத், மீரா ஜாஸ்மின் ஜோடியாக நடித்து வெளியாகியுள்ள படம் நேபாளி. இப்பத்தில் காவல்துறையை இழிவுபடுத்துவது போல காட்சிகள் உள்ளதாக சர்ச்ைச எழுந்துள்ளது.
இதையடுத்து இயக்குநர் துரைக்கு வட சென்னை காவல் இணை ஆணையர் ரவி, வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து இணை ஆணையர் ரவி கூறுகையில், நேபாளி படத்தில் போலீசை அவமதிக்கும் காட்சிகள் நிறைய உள்ளன. விசாரணை நடத்தப்போகும் இன்ஸ்பெக்டர் கதாநாயகியை கற்பழிப்பது போலவும், அடிக்கடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜட்டியோடு நிற்பது போலவும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது.
போலீசை இழிவுபடுத்தும் காட்சிகள் நீக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். இந்த படத்திற்கு அனுமதி கொடுத்த மத்திய அரசின் சென்சார் போர்டுக்கும், இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்படும்.
நேபாளி படத்தை பார்ப்பவர்களுக்கு போலீசாரை பற்றி மிகவும் தவறான எண்ணம் ஏற்படும். விசாரணைக்கு வரும் போலீசார் மீது இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும்.
போலீஸ் மீதான நம்பிக்கையை குலைக்கும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் அனுமதியோடு இந்த நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது என்றார் ரவி.
இதற்கிடையே, நேபாளி படம் நீளமாக இருப்பதாகவும், பல காட்சிகள் தேவையில்லாமல் இருப்பதாகவும் பேச்சு எழுந்ததால், அப்செட் ஆன பரத், இயக்குநர் துரையிடம் தேவையில்லாத காட்சிகளை வெட்டி விடுமாறு கோரிக்கை விடுத்தாராம்.
குறிப்பாக சீரியல் கொலைகளுக்கான காரணம் குறித்து படத்தில் சரியான விளக்கம் இல்லாதது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. அதையும் சரி செய்யுமாறு துரையிடம் பரத் கேட்டுக் கொண்டாராம்.
இதையடுத்து படத்தின் 2ம் பகுதியில் பல காட்சிகளை நீக்கியுள்ளாராம் துரை. இதன் மூலம் படத்தின் பிற்பாகுதியில் குறைவாக இருந்த விறுவிறுப்பு தற்போது கூடியுள்ளதாம்.